ஒரு பாட்டோட தாக்கத்துல இன்னொரு பாட்டு வருமான்னா கண்டிப்பா வரும். அந்த வகையில் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.யின் ஒரு பாடலோட தாக்கத்தில் அதே மெட்டை வைத்து ஒரு படத்தில் இளையராஜா 2 பாடல்களைப் பண்ணினார். அந்தப் பாட்டு பெரிய வெற்றியை அடைந்தது. அது என்னன்னு பார்க்கலாமா… 1986ல் ஏவிஎம் தயாரிப்பில் ‘மெல்லத்திறந்தது கதவு’ படம் வெளிவந்தது. இந்தப் படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கியுள்ளார். மோகனின் படங்கள் என்றாலே பாடல்கள் ஹிட்டு தான். அந்த வகையில் இந்தப் படமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு எம்எஸ்.வி.யும், இளையராஜாவும் இணைந்து இசை அமைத்தனர். இளையராஜா மெல்லிசை மன்னரிடம் கேட்கிறார். அண்ணே உங்க குருநாதர் சி.ஆர்.சுப்பராமன் சண்டிராணி படத்தில் வான் மீதிலே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி பண்ணிக் கொடுங்கன்னு கேட்கிறார். பானுமதியும், கண்டசாலாவும் பாடியிருப்பாங்க. அந்தப் பாடலை நான் தான் பண்ணினேன் என்கிறார் எம்எஸ்.வி. ஏன்னா அந்தக் காலகட்டத்தில் சண்டிராணி பட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கும்போது பாதி படம் உருவாகும்போதே இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இறந்து போயிடுறாரு. அதுக்குப் பிறகு இந்தப் பாடல், பின்னணி இசை எல்லாமே எம்எஸ்.வி. தான் பண்ணினார். அந்தப் பாடல் பஹாரி ராகம். அந்த வகையில் மெல்லத்திறந்தது கதவு படத்தில் அதே பஹாரி ராகத்தில் போடுகிறார். அதுதான் ‘வா வெண்ணிலா’ பாடல். அதே டெம்போவில் துள்ளலாக எஸ்பிபியும், எஸ்.ஜானகியும் பாடியிருப்பாங்க. இன்னொன்னு ஒரு விழா நடக்கும். அங்கு இஸ்லாமிய பெண் பாடுவது போல எஸ்.ஜானகி மட்டும் பாடுவாங்க. எஸ்.பி.பி. துள்ளலில் நிறைய வித்தியாசம் காட்டியிருப்பாங்க. அதே போல இஸ்லாமிய பெண் போல அழகாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலைப் பாடியவர் கவிஞர் வாலி. ‘முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும், திரை போட்டு உன்னை மறைத்தாலும் பாவம். ஒரு முறையேனும் திருமுகம் காணும் வரம் தர வேண்டும் எனக்கது போதும். உனைச்சேர எதிர்பார்த்து முன் ஏழு ஜென்மம் ஏங்கினேன்’ என அழகான வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த வரிகளுக்குள் ஜானகி ‘ஆஹா’ ‘ஏஹே’ என இடையிடையே ஹம்மிங், புல்லாங்குழல் என பாடலை ரம்மியமாக உருவாக்கி இருப்பார் இளையராஜா. அதே போல பெண் மட்டும் பாடும் பாடலில் இடையிசையின் போது கஜல் போட்டு அசத்தியிருப்பார் இளையராஜா. 2வது இடையிசையில் நய்யாண்டி மேளத்தையும் கொண்டு வந்து சேட்டை செய்திருப்பார் இளையராஜா. இது நம்மை வேறு லெவலுக்குக் கொண்டு செல்லும். இப்போது கவனித்துப் பார்த்தால் அந்த வான் மீதிலே பாடலும், வா வெண்ணிலா பாடலும் நன்றாக ஒத்துப்போகும். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
நான் வேம்பார் மணிவண்ணன் ரசிகன் ஆகிவிட்டேன்.எனக்கு வயது70ஐ நெருங்குகிறது. பிடித்த பாடல்களோ 1950/60களில் வந்த பாடல்கள். ரேடியோ சிலோனில் கேட்டு மகிழ்ந்து மறந்து போன பாடல்களை வேம்பார் விருநதளிக்கிறார்.மீண்டும் என்னை சிறு வயதிற்கு கூட்டி செல்கிறார்.மிக்க நன்றி.
மிகவும் அருமையான பாடல் இலங்கை வானொலி தமிழ் சேவை.2. மற்றும் ஆசிய சேவைகளில் ஒளிபரப்பான மந்தமாருதம் நினைவில் நின்றவை நெஞ்சில் நிறைந்தவை மற்றும் இரவின் மடியில் போன்ற நிகழ்ச்சிகளில் கணக்கற்ற முறை ஒளிபரப்பாகி பல லட்சக்கணக்கான நேயர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடல் தாங்கள் வழங்கும் பாடல்கள் யாவும் மணியான பாடல்கள் சென்ற தலைமுறை இலங்கை வானொலியின் நேயர்கள் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள் மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் சகோதரர் வேம்பார் மணிவண்ணன் அவர்களே திருக்கோவிலூர் செல்வகணபதி 🙏💐😊
மொழிமாற்றம் செய்யப்பட்டு கூட தமிழில் பாடல்வரிகளை மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ளது. 2. கண்டசாலா,பானுமதி இருவருக்கும் தெலஙகு தாய் மொழியாக இருந்தாலும் அவர்கள் தமிழை உச்சரித்தவிதம் இக்கால கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்!!!
ஆனந்த மழை பொழியுதே அன்பால் உள்ளம் வழியுதே உள்ளம் சேர்க்களாம் அதில் உறவை சேர்க்களாகுமே வான் மீதிலே இன்பம் தேன் மாரி மழை பெய்யுதே. அருமை தமிழ் தாயே உன்னை வணங்குகிறேன்.
எந்த ஆடம்பரமும் இல்லை.என்ன அழகு அந்த இருவரின் முகபாவனைகளும்அருமை அருமை பானுமதி அம்மா என்ன அழகு. இப்பவும் படம் எடுக்குறாங்க ஒவ்வொரு நாடா போய் ஒன்றையும் காணோம்.
நிலா.... இல்லாத..காதல்..பாடல் எந்த காலத்திலும் பாடமுடியாது. இரண்டு இதயங்களில் இன்பம் கறுப்பு வெள்ளை பாடல் கலரில் வரிகள்.என்றும் இனிக்கும் பதிவு அருமை பாராட்டுக்கள்.
"வான் மீதிலே இன்ப தேன் மாரி பெய்யுதே" என்ற இந்த என்ற பாடல் இசைஞானிக்கு மிகவும் பிடித்த பாடல். இப் பாடலின் துவக்கத்தை வைத்து தான் "வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே"... என்ற பாடல் இசைஞானியின் வேண்டுகோளுக்கிணங்க MSV யாலும் ஞானியாலும் மீண்டும் அருமையான வடிவத்தில் உருவாக்கப்பட்டதாக அவரே பேட்டியில் கூறியுள்ளார்!
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே பெ: வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வண்ணம் சேர்க்கலா..மதே வீசும் வெண்ணிலாவிலே வா...ன் மீதிலே..ஏஏ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதேஏஏ... ஆ: சுகாதீபம் மேவும் அனுராக கீதம்...ம்ம்ம் ஸ்ருதியோடு பா...டும் மதுவண்டு கேளா...ய் பெ: சுகானந்த ஜீவிய.. கா....னம் இதேஏஏஏ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வா...ன் மீதிலே..ஏஏ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ ஆ: வசந்தத்திலா...டும் மலர் தென்றல் நீயே மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நா..னே பெ: நிஜந்தான் என் ஆருயிர் நீ... வா....ழும் நா..ள் வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வா...ன் மீதிலே..ஏஏ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ ஆ: மனம் ஒன்று சேர்ந்தே உறவா...டும் போ...து மது உண்ணும் வண்டு தனக்கேது ஈடு.. பெ: இமைக்கின்ற போகமும் ஆ...கா...து..ஊஊ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலா..மதே வீசும் வெண்ணிலாவிலே வா...ன் மீதிலே..ஏஏ வா..ன் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதேஏஏஏ
இப்பாடலில் பானுமதியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.பானுவின் வித்தியாசமான குரலில் இப்பாடல் இனிக்கிறது.M.S.V யின் இசையும் மனதை மயக்குகிறது.காலத்தை க்கடந்து நிற்கும் இந்தப்பாடல். ரா. மன்.
As a small boy during the 1950's I used to listen to this daunting melody aired often by Radio Malaya. Brought back sweet memories listening to the song now.
இந்தப் படம் வெளியான ஆண்டு 1952, நான் பிறப்பதற்கு 7 ஆண்டுகள் முன்பு. ஆனால் இன்று கேட்டாலும் மனதை பிழியும் விதமாக இசை புனைந்து இருக்கும் சி.ஆர். சுப்பராமன் மற்றும் மன்னர் இருவரின் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆண்டுகள் 67 கடந்தும் இதற்கு மட்டும் வயதாகவே இல்லை
இப் பாடலில் நடிகை.பானுமதியின் கண் அசைவும் பாடும் குரலிசையும் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை அந்த காலத்தில பெற்றது . பின்னாளில் இந்த டியூன் தான் மெல்ல திறந்தது கதவு படத்தில் " வா .. வெண்ணிலா உன்னை தானே வானம் ...பாடலாக உருவாயிற்று . இப்படத்திற்கு எம் . எஸ்.வி மற்றும் இளையராஜா இசையமைத்தனர் .
arikrishnan malaysia.All Bhanumathi songs are real music to our ears . evergreen forever, in senifeild no actor and actress was able to break her record. she is playback singer, music composer, music director,she never allow any body to sing for her when act in any movie, script writer, studio owner. mentor for sivagi ,mgr in tamil nageswarao n.t.r in telugu. achieved all this when she was around 28 yeats, most talented seni actress in south india. lastly no one in movie industry has ever break her record
Such a heart lifting song. Bhanumathy looks so seductive in the first few mins of this song😍 She was so beautiful and so talented too. I love to watch her films and am forever searching for them on the net. I have watched the Telugu version of this film , just to watch her NTR looks so handsome 😍
வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே சுகாதீபம் மேவும் அனுராக கீதம் சுதியோடு பாடும் மது வண்டு கேளாய் சுகானந்தம் ஜீவிய கானம் இதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வசந்தத்திலாடும் மலர் தென்றல் நீயே மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நானே நிஜந்தானே என் ஆருயிர் நீ வாழும் நாள் வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும் போது மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது இமைகின்ற போகமும் ஆகாது வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே
வான் மீதிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே சுகாதீபம் மேவும் அனுராக கீதம் சுதியோடு பாடும் மது வண்டு கேளாய் சுகானந்தம் ஜீவிய கானம் இதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வசந்தத்திலாடும் மலர் தென்றல் நீயே மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நானே நிஜந்தானே என் ஆருயிர் நீ வாழும் நாள் வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும் போது மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது இமைகின்ற போகமும் ஆகாது வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே
@@rukkathesatirist மன்னிக்கவும் அது இந்தி மெட்டின் தழுவல் அல்ல! சண்டி ராணி என்ற படம் பானுமதி அம்மா கதை எழுதி நடித்து அவரது கணவர் ராமகிருஷ்ணாவோடு தயாரித்து இயக்கிய படம்! இது ஒரே சமயத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று 3 மொழிகளிலும் தயாரானது. அப்போது சி.ஆர். சுப்புராமனிடம் உதவியாளராக இருந்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்கள் தான் தமிழில்தான் மெட்டமைத்து பானுமதி அம்மா ஓகே செய்தார்கள்! அதே மெட்டை தெலுங்கு ஹிந்திக்கும் ஓகே செய்யப்பட்டது! ஹிந்தி பாடலாசிரியர் ரொம்ப தடுமாறினார் மெட்டுக்கு பாட்டு எழுதுவதற்கு! ஹிந்தி படத்துக்கு இசை அமைத்தது மட்டுமில்லாமல் மெல்லிசை மன்னர் தனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில் சில சொற்களை அவரே சொல்லி சரணம் அமைத்து ஆரம்ப வரிகளையும் எழுதினார்! பகுத் அச்சா என்று பாராட்டிவிட்டு மற்ற வரிகளை அந்த ஹிந்தி பாடலாசிரியர் எழுதி முடித்தார்! அந்த பாடல்: சந்தா தலே CHANDA TALE MUSKU RAYE JAWANIYA