Тёмный

Thendral Vanthu Theendumbothu 8D Audio Song | Avatharam | Ilayaraja,Janaki - Tamil 8D Audios 

8D Audio - Tamil
Подписаться 11 тыс.
Просмотров 126 тыс.
50% 1

Thendral Vandhu Theendum 8D Audio | Avatharam | Ilayaraja,Janaki
LYRICS
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
Songwriters: Ilaiyaraaja / valli
_________________
*******************
Thendral, Vandhu, Theendum, ilayaraja, nasser, revathi, tamil, film, song, avatharam, ilaiyaraaja, Super Singer Junior 5, ASSJ5, Airtel Super Singer Junior 5, SSJ5, Singing Competition, Talent Hunt, Reality Show, Voice Hunt, Star, Star Vijay TV, Vijay TV, Vijay, Redefining Entertainment, சூப்பர் சிங்கர் ஜூனியர் 5, தமிழ், விஜய், டிவி, தொலைக்காட்சி, Tamil TV, Tamil Shows, பாடல், Playback Singer, K S Chithra, Mano, Malgudi Subha, hotstar, Bhavana, Ma Ka Pa, SPB, S P Balasubramaniam, S. P. Balasubrahmanyam, Padum NIla, Hero Heroine Round, Thendral Vanthu Theendumbothu, Avatharam, Prithika, Avatharam, Avadharam, Thendral Vanthu Theendumbothu, Thendral Vandhu, 1995, Nassar, popular actors, Kamalam Movies, Revathi, Bala Singh, Srividya, Delhi Ganesh, Venniradai Moorthy, Ilaiyaraaja, S. Janaki, Vaali, tamil film, movie, padam, Chennai, cinema, Super, Hit Song, Melody, Music, Isai, Tamil song, super hit, Thamizh song, south India, film song, picture, Kollywood, Beat, HD, High quality, Best Quality, Ever Green, Duet song, thendral vanthu by dhanush, Thendral Vanthu Theendum Boothu Song - Airtel Super Singer P riyanka Sings.

Видеоклипы

Опубликовано:

 

9 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@nizammuddinrajamohamed2418
@nizammuddinrajamohamed2418 3 года назад
என்ன அருமையான பாடல் நாசர் அவர்கள் பாடுவதுமாதிரியே சாயலில் ராகதேவனைதவிர வேறு யாரும் பாடமுடியாது
@sririsankar473
@sririsankar473 Год назад
தமிழ்நாடு
@bhaskarang3248
@bhaskarang3248 Год назад
கொடை மிளகாய் மூக்குகாரன்
@PS2-6079
@PS2-6079 2 года назад
1995-ம் ஆண்டு கமலம் மூவீஸிற்காக வைத்யநாதன் தயாரிப்பில், நடிகர்கள் நாசர், ரேவதி, பாலசிங்கம், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தியாகு, சச்சு, ஜூனியர் பாலையா, காகா இராதாகிருஷ்ணன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "அவதாரம்." நாசர் பிரதான கதாபாத்திரத்தில் தோன்றியதோடு மட்டுமல்லாமல் எழுதி இயக்கவும் செய்திருந்தார். இது அவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இளையராஜாவின் இசையில் ஆறு முத்தான பாடல்கள் திரைக்கதைக்கு வலுவூட்டும் விதமாக வாலிபக் கவிஞர் வாலியால் புனையப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்! கதைப்படி, டெல்லி கணேஷின் நாட்டுப்புற நடனக் குழு, இந்து சமய நிகழ்ச்சிகள் உள்ளடங்கிய கலைப்பணியாற்றி வந்ததால் அதில் சேர்ந்து விட வெகுளியான நாசர் முயற்சிக்கிறார். காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அந்த நாடகக்குழுவில் உள்ள பாலசிங்கம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவரை குழுவை விட்டு நீக்கிவிட்டு நாசரை குழுவில் இணைத்துக் கொள்கிறார்கள். டெல்லி கணேஷின் மகள் ரேவதி பார்வை அற்றவள் எனத் தெரிந்தும் நாசர் அவளை காதலிக்கிறார். அவளும் அப்படியே! ஒரு மேடை நிகழ்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக டெல்லி கணேஷ் இறந்து போனதை அடுத்து அந்த நாடகக்குழுவில் இருதவர்கள் பிரிந்து சென்று விடவே, நாசர், ரேவதி இருவரும் நடனக் கலைஞர்களாக தொடர வேண்டும் என்று ஊரைவிட்டு புறப்பட்டு பாலசிங்கத்திடம் தஞ்சம் அடைகின்றனர். ஆனால் வில்லன் பாலசிங்கம், ரேவதியை கற்பழித்துவிட்டு நாசரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதும், அங்கிருந்து தப்பித்து வில்லனை பழிவாங்குவதும் தான் படத்தின் க்ளைமாக்ஸ்! படத்தைப் பொறுத்தவரை அனைத்து கதாபாத்திரங்களும் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்! பாலசிங்கத்தின் திறமை, இது அவருக்கு முதல் படம் அல்ல என்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது நாசர் இயக்கிய முதல் படம் என்று நம்பமுடியவில்லை! அவரது திறமை பல இடங்களில் வெளிச்சம்போட்டு காட்டுவதை மறுக்க முடியாதல்லவா? இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்தது என்று சொன்னால் மிகையல்ல! சரி... பாடலிற்கு வருவோம்! பெண் : "எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது" ஆண் : "எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது" காதலூறும் வரிகள்! இளையராஜா & S.ஜானகி குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஒருசில குரல்களாக ஒலிக்கும் கோரஸ் (Chorus) கேட்போரை எங்கேயோ அழைத்து செல்வதாக ஒரு பிரமை! இசையமைப்பாளரின் தனித்துவமான அடையாளங்களை காட்டுகின்ற பாடலாக அமைந்தது என்பது தான் நிதர்சனம்! பாடலாசிரியரும் அவரது பங்கிற்கு ஒவ்வொரு சரணத்திலும் அன்பைத் தவிர வேறு எதுவும் நிலையானது இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இன்ப துன்பத்திலும் மனதை இலகுவாக்கும் பாடல் என்பது மட்டுமல்ல, ஓராயிரம் முறைகேட்டாலும் சலிப்பு தட்டாதவாறு உருவாக்கியதை என்னவென்று சொல்ல? நிற்க... இந்த அழகான பிரபஞ்சத்தில் நம் எல்லோருக்கும் கிடைத்த இந்த வாழ்க்கை என்பது மிகக்குறைந்த கால அளவே. அதில் எண்ணில் அடங்கா எதிர்பார்ப்புகளும், சோதனைகளும், வேதனைகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் யாரையும் விட்டுவைக்காமல் ஆட்டிப்படைத்தாலும் கூட, அதையும் தாண்டி கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே.... விவரிக்க வார்த்தைகள் இல்லை! மகிழ்ச்சியான சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்விக்கும் மனிதனே மாமனிதன்! இந்த பரந்த உலகில் நமக்கான வாய்ப்பு ஒருமுறை மட்டும் தானே? மனவருத்தம் எதற்கும் எப்போதுமே தீர்வாகாதபோது அதனை ஓரம் கட்டி அடுத்த கட்டத்தை நோக்கி வெற்றி பயணத்தை தொடர்வதுதானே புத்திசாலித்தனம்! மகிழ்வித்து மகிழுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே... இப்படம் வெளியாகி சுமார் இருபத்தி ஏழு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்களில் பலர் இன்றில்லை! பலர் ஓய்வு பெற்று விட்டார்கள் என்றாலும் கூட இப்படம் வெற்றிபெற்றமைக்கு அவர்களுடைய பங்கும் போற்றுதலுக்குரியது அல்லவா? அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
@decklesdeckles6278
@decklesdeckles6278 3 года назад
இசையின் தெய்வம் இளையராஜா அப்பா இசையென்றாலே எனக்கு எதுவும் தெரியாது... ஆனால் இசையின் இறைவனை தெரியும் அந்த ஞானி எங்கள் இசை ஞானி இளையராஜா
@prasannaprasan8380
@prasannaprasan8380 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை....😘my always fav..
@MuthuKumar-ey8pg
@MuthuKumar-ey8pg 4 года назад
இளையராஜா சார் குரல் வேர் லவல்
@vinothkumarv1388
@vinothkumarv1388 3 года назад
என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 😍😍😍😍
@samariaanthony6855
@samariaanthony6855 2 года назад
மிகவும் அருமை
@Harish909
@Harish909 7 месяцев назад
என்னைவும்
@mamthashetty7509
@mamthashetty7509 4 года назад
I am kannadathi I didn't understand lyrics but what beautiful 🌹🌹🌹 evergreen song I like it so much ❤❤❤❤❤
@bala2627
@bala2627 2 года назад
நாசர் பாடினது போலவே இருக்கு...first i thought like that!!!!🎊🎊🎊🎊🎊
@yakopujeeva292
@yakopujeeva292 4 года назад
ஜானகி மேம் குரல் வேர லவல்
@duraisaravanan6724
@duraisaravanan6724 3 года назад
இன்றுவரை மன அமைதியை கொடுப்பது உங்கள் பாட்டுதான் தான் இளையராஜா சார்
@suryakkksuryakkk5689
@suryakkksuryakkk5689 4 года назад
Nice voice janaki mam
@ArumugamC-eb9gl
@ArumugamC-eb9gl Год назад
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்
@kavi_59a
@kavi_59a 4 года назад
Super janaki mam
@senthils8008
@senthils8008 4 года назад
lyrics very very best in World
@nallamuthu6275
@nallamuthu6275 4 года назад
S. Janaki the legend
@santhoshSanthosh-nz7sw
@santhoshSanthosh-nz7sw 4 года назад
Vera level 🙂🙂🙂😎😎
@jayanthis623
@jayanthis623 3 года назад
Nice💞
@stephanmadhivathani1447
@stephanmadhivathani1447 2 года назад
சொர்க்கம் இசையிலே என் தலைவன் இசையிலே....
@velurajendran8467
@velurajendran8467 4 года назад
இசையரக்கன் SG 21-04 -2020
@TamilSelvan-gp3up
@TamilSelvan-gp3up 4 года назад
Thanks to ILAYARAJA,,💗💖
@chella7305
@chella7305 3 года назад
இறைவன்
@sudhanthiramkarunanidhi5793
@sudhanthiramkarunanidhi5793 3 года назад
Evergreen song
@kolarueditz1678
@kolarueditz1678 8 месяцев назад
ராஜா எங்கள் ராஜா
@senthilkumar1178
@senthilkumar1178 2 года назад
அருமையான பாடல்
@ngunaseelan1267
@ngunaseelan1267 4 года назад
Semma
@manihomes7126
@manihomes7126 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍😍😍😍😍
@brge984
@brge984 4 года назад
வார்த்தைளே இல்லை
@tamilxpo-6260
@tamilxpo-6260 5 лет назад
Best song from illayaraja
@kannanc1983
@kannanc1983 4 года назад
தேனாக இனிக்கிறது ராஜா சார் மற்றும் ஜானகி அம்மா குரல்
@user-sd1wb6cj5j
@user-sd1wb6cj5j 3 года назад
சூப்பர்
@avastudio4181
@avastudio4181 2 года назад
எனக்கு பிடித்த பாடல்
@silambuarasan1559
@silambuarasan1559 Год назад
I love you to thish song ❤️❤️ பவித்ரா சிலம்பு ❤️
@tamilbhuvana4616
@tamilbhuvana4616 2 года назад
காரணம் தெரியாமல் மனதில் பதிந்த பாடல்.....
@BALUBalu-wz3eo
@BALUBalu-wz3eo 4 года назад
So nice
@Harish909
@Harish909 7 месяцев назад
❤❤❤
@sivakumarorusolvasan6310
@sivakumarorusolvasan6310 5 лет назад
Super song
@SenthilKumar-tr9nx
@SenthilKumar-tr9nx Год назад
Good song
@vinothiniharish2818
@vinothiniharish2818 3 года назад
இளையராஜா song is My fav
@ganapathithi8720
@ganapathithi8720 2 года назад
My favourite song
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 Год назад
தங்களுக்கு நிகர் தாங்களே
@mathankumar1258
@mathankumar1258 2 года назад
Thenral is not a word it's an emotion
@jeevitharavikumarr675
@jeevitharavikumarr675 10 месяцев назад
😊
@vinothiniharish2818
@vinothiniharish2818 3 года назад
My fav
@marimuthumarimuthu5589
@marimuthumarimuthu5589 4 года назад
★★★
@heroofcomments8956
@heroofcomments8956 2 года назад
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே… தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது ஓடை நீரோட இந்த ஒலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரு ம் நிறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் மனம் போல அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலனமே அந்த இசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாய் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன பொன்னம்மா சின்னக் கண்ணம்மா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில
@ramlux2953
@ramlux2953 4 года назад
Semma
@rsuriya6888
@rsuriya6888 11 месяцев назад
❤❤❤
Далее
Thendral Vanthu Theendumbothu
5:18
Просмотров 19 тыс.
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн
காலை தென்றல்
31:05
Просмотров 3,3 тыс.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 281 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 65 млн