அற்புதம் காயத்ரி, உங்கள் நடனம் என்னைப் பிரமிக்க வைத்து விட்டது. நாயகி பாவத்தை நன்கு புரிந்து கொண்டு சிறிதும் விரசம் கலக்காமல் அழகுற ஆடினீர்கள். இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணமாக்க வேண்டிய காதலையும் அதன் தாபத்தையும் ஏக்கத்தையும் கண்முன்னே கொண்டு வந்து காட்டினீர்கள். பாடலின் முடிவில், ‘ஐயோ இந்தப் பெண் இப்படி ஏங்குகிறாளே; நாமாவது போய்த் தூது சொல்லி அவனை அழைத்து வருவோமா! என்று நினைக்க வைத்து விட்டீர்கள். ஆனால் சாதாரண மானிடர்கள் போய்ச் சொல்லிக் கூட்டிவரக்கூடிய மனிதன்மேல் இந்தப்பெண் ஆசை வைக்கவில்லையே!’, என்கிற அங்கலாய்ப்பும் ஏற்பட்டது. மருதாணி இட்டுக் கொண்டதும், வாசலில் கோலம் போட்டுத் தோரணம் கட்டினதும், விளக்கையும் நிவேதனத்தட்டையும் வைத்துக் கொண்டு வாசலில் வெகு தொலைவு வரை ஆவலோடும் ஏக்கத்தோடும் பார்த்துக் கொண்டு காத்து நின்றதும் மறக்க இயலாது. பொதுவாக சிருங்கார ரச நடனங்களைப் பார்க்கும் பொறுமை இல்லாத என்னையும் ரசிக்க வைத்து விட்டீர்கள். தங்களுக்கு மேன்மேலும் உயர்வையும், புகழையும், சகல சௌபாக்கியங்களையும் அம்பாள் அனுக்கிரஹம் செய்யப் பிரார்த்திக்கிறேன்.
Sergio Chavez Bharatavarsha is the most ancient surviving civilization on earth.... A culture grounded on spirituality and wisdom.... The country the size of a continent where people, places, color and appearances change every few miles.... Today however India needs our help.... There is an urgent need to revive this ancient culture.... A voice lost in utter mishmash of materialistic western influence....
Paattu pramaadam... Dance was so lovely...tears in my eyes at the bhaavam in the words... Pls announce composer's name also.. This is one of the jewels, Mutthu Thaandavar padam.