ஆன்மீக பாதையில் நான் பின்பற்றும் வழி சரிதானா என்று குழப்பமான மனநிலையில் இருக்கும்போது சரியான வழிகாட்டியாக உங்கள் சக்ரட்டிஸ் ஸ்டூடியோ இருக்கின்றது பேராசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
திருமந்திரம் மட்டுமே வள்ளற் பெருமானாரால் சுத்தசன்மார்க்கிகள் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறார். தமிழர்ஆறுமுகம் அய்யாமூலம் தமிழையும் திருமந்திரத்தை சுவைக்க வைத்ததற்க்கு மிகவும் நன்றி அய்யா...
தமிழ் மெய்யியலின் தந்தை என்று திருமூலரை நிலைநிறுத்த முடியும் என்ற பேரா. முரளியின் கருத்துக்கு விளக்கம் போல் அமைந்த அற்புதமான உரையாடல். கேள்வி கேட்டவரின் அறிவு நுட்பமும் திட்பமும் பதில் பதில் அளித்த ஆறுமுகனாரின் அறிவுப் பரப்பும் தெளிவும் ஒரு நிறைவான அனுபவத்தை வழங்கியது. இருவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான உரையாடல், திருமூலரை பற்றி புரிந்து கொள்ள தேவையான அனைத்து கேள்விகளையும் தொடுத்தும், அதற்கு தெள்ளத் தெளிவாக பதில் அளித்ததும் மிகமிக அருமை. நான் இந்த சேனலில் பார்த்த பலவற்றில் இதை முதன்மையானதாக கருதுகிறேன். இருவருக்கும் மிக்க நன்றி.
🙏🇮🇳🙏 அய்யா அவர்களுக்கு வணக்கம், உங்கள் பதிவுகள் தீர்க்க தரிசனம்., அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறை தத்துவத்தை மிக அருமையாக எளிமையாக பாமர மக்களுக்கும் புரியும்படியாக விளக்கியுள்ளார்கள்., உங்கள் பதிவும் அதோடு பொருந்துகிறது. வாழ்க வளமுடன் 🙏🇮🇳🙏
கடவுளை கடைசி வரை ,...ஆராய்ச்சிக்காகவே...வச்சிட்டாங்கய்யா...ஆனா...பேப்பர்களிலோ...கோட்பாடோ...கட்டமைப்போ...இறையை நெருங்க முடியாது...ஆனா இந்த உலகத்தில புராணங்களும்..வேதங்களும்...என்ன தான் உங்களுடைய மூளையை சலவை செய்தாலும்...இறை உணர்தல் வேறு தளத்தில் தான் நிகழ்கிறது...ஆகவே வரலாறு படிக்க இது உதவும்....
ஐயா உங்கள் இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காணொளி எனது நீண்ட கால சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டது. அதுவும் எப்படி என்றால் ஒரு நீண்ட நெடிய தமிழர் மெய்யியலை புரியும் படி உடைத்து உடைத்து நுணுகி நுணிகி தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டீர்கள். அந்த இறைவனே எனக்காக உங்கள் இருவரையும் அனுப்பி விளக்கம் கொடுத்து போல் உள்ளது. எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. ஆறுமுகனாரை நேரில் வந்து வாழ்த்த வேண்டும் போல் உள்ளது. மேலும் எனது வேண்டுகோள் என்னவென்றால் தமிழகத்தில் நிகழ்ந்த சமய சண்டைகள் பற்றியும் பவுத்தர்கள் சமனர்கள் ஆசீர்வாதங்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் என்பதன் வரலாற்றை பேசவும். மிக்க நன்றி.
மிகவும் அருமையான பதிவுகள் ஐயா இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த பணி மேலும் மேலும் சிறக்க உள்ளன்புடன் வாழ்த்துகிறோம் 🙏வாழ்க வளமுடன்.
அருமையான உரையாடல் தமிழ் உலகில் திருமூலரின் பங்கு மிக முக்கியமானது. இந்த உரையாடல் மூலம் அவரின் மெய்யியல், கருத்தியல், சமையவியல், மரபியல் என்று உங்களின் கருத்தாழமிக்க உரையாடல் மிக்க பயனுள்ளதாகின்றது. நன்றி, வாழ்த்துக்கள்.
மதிப்புக்குரிய உங்கள் இருவரின் உரையாடல் அருமை! வாழ்த்துகள்!! பிராமணர்கள் சிலர் இறைவன் பேரில் தவறான, துவேஷ எண்ணங்களையும், சில கோட்பாட்டில் தவறான வியாக்யாணங்களையும் சொல்லி வருவதால், அவர்களைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், அவர்களும் இறைவனின் படைப்பு. எனவே, ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதையும், இழிவுபடுத்துவதையும் திருமூலர் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார். ஆனால், தமிழர் சமயம் சைவம் என்பதை உறுதியாக நிலைப்படுத்தியுள்ளார்.
Very glad to see both of you together for whom I have great respect and admiration... Please continue to unfold the unknown facts for people like us. Thank you🙏.
Prof. R Murli's service is divine service thru Socrates Studio Channel. Both, Prof R Murali & Prof Arumuga Tamilan (for this show) are gifted; and they are gift to all whoever seeking knowledge beyond 'religion' ( religion which is always suppresses human into a fixed BOX). From Malaysia. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு".
👏👏👏💐💐💐💐👍👍👍 அற்புதமாக கத்தி மேல் நடப்பது போல் இருவரும் இதை கவனமாகவும் அறிவார்ந்தும் , குறிக்கோளை அடையும் நோக்கோடும் (Objectively) தமிழ் மெய்யியலை விவாதித்து ஒரு கருத்து செறிவுமிக்க உரையாடலாக கொண்டு சென்றது பாராட்டுக்குரியது. வாழ்த்துகளும் நன்றியும். 👍👍👍🙏🙏🙏 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
திருமுலர் முதல் வள்ளலார் முடிய சைவ சித்தாந்தத்தில் ஆரம்பித்து ஒரே நிலைபாட்டில் தான் முடிக்கிறார்கள்.. இதில் முற்றிலும் மாறுபடுபவர் சிவவாக்கியர் மட்டுமே... திரு. ஆறுமுகம் அவர்கள் மிக கவனமாக பேசுவதை பார்க்க முடிகிறது..
To day lecture on philosophy in Thirumandram is special for us. Sir, Arumugam critical, investigation, explanation on Thirumoolar philosophy, Metaphysics, comparative exploration, interpretation on belief, materialism, Agamam and idealism, Vedantam and Shiva Chitantam ,self enquiries and Pathi, Pasu and Pasam is inspired and useful for me. More than that Murali sir questions and your beautiful submission shows the greatness of your insight and critical analyse in depth on Thrumoolar philosophy is very useful to everyone .It made me to re reading the Thirumandram.Thank you sir both of you.
ஆகமம் என்பது ஒரு இல்லாத ஒன்றை சடங்கு என்று ஏமாற்றுவது தான் அதனால் தான் மாணிக்க வாசகர் ஆகமாகி நின்ற (இருந்து) அன்னிப்பான் தாழ் வாழ்க ஆகமத்தில் இருந்து நீக்கிவிடுவிட்டார் அல்லவா அவரை பணிகிறேன் என்று பொருள் படும் என்று நினைக்கிறேன் அவ்வளவுதான்
இரு ஆசிரியர் கலூக்கும் இது போன்ற உரையாடல் தொடர்ந்து நடத்துங்கள். நீங்கள் அறிவு தலத்தில் செய்யும் தொண்டுக்கு ஆத்மார்த்த நன்றி கள் அமிழ்தம். ஒருவிதத்தில் இப்படி தான்இருக்குமோ????????
மிகவும் அருமையான உரையாடல். என் மனதில் உள்ள பல கேள்விகளை முரளி ஐயா கேட்டார். சிறப்பான பதில் அறிமுகதமிழன் ஐயா விடம் இருந்து கிடைத்தது (அதிலும் குறிப்பாக படமாடக் கோயில் எடுத்து காட்டியது மிகவும் சிறப்பு இன்று இன்னொரு திருமந்திர பாடல் கற்றுக்கொண்டேன் ). Socrates Studio விற்கு மிகவும் கடமை பட்டுளோம். இது போல் தமிழர் இறையியல் , மெய்யியல், வாழ்வியல் பற்றி காணொளிகள் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
very important concept of Love and sharing is reiterated in Thirumanthiram .Again we need to keep our physical body healthy and find out what is inside. Thanks.
Appachi அய்யா.. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம். நானும் திருமந்திரம் படித்தேன் என்று இல்லாமல் அதை ஆழ்ந்து படித்து, மேலும் திருமூலரின் பார்வையில் இருந்து சிந்தித்து, அதில் தெளிவு பெற்று மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். நான் வளர்ந்தது நகரத்தார் சமூகத் துடன். அவர்களை மிகவும் கூர்ந்து கவனித்து இருக்கிறேன். அவர்கள் சொல்ல வந்த செய்தியை மிகவும் தெளிவாக பேசுவார்கள். குழப்பி கொண்டு பேசும் நகரத்தார்கள் நான் சந்தித்தது இல்லை. மிக்க நன்றி அய்யா. உங்களை நேரில் சந்திப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.. ❤🎉❤ Thanks to Murali Sir🎉❤
Great speech by Dr.Arumuga tamizan sir,. Very extraordinary explanation on tirumoolar udal valarthoor uyir valarthore. ,He gave so much importance to body building that means he encourage materialistic life too.
Really very fantastic conversion between spiritual scientist and physical scientist. Good combination Karu arumuga Tamilian may be belongs to our Nattukottai area .continuously recently watching his speech .