மயில் சாமியை மேடையிலேயே கலாய்த்து தள்ளிய விவேக்..! For more content go to www.kalakkalcinema.com/ Facebook Link: / kalakkalcinema Twitter Link: / kalakkalcinema
இம்மாதிரி அருமையான மனிதரை இழந்து மனம் வேதனையுருகிறது.என்ன அருமையாக அத்தனை விஷயங்களை ஆராயிந்து பாராட்டி பேசுகிறார்.விவேக் சிறந்த சிந்தனையாளராக விளங்கினார்
நல்லவன் வாழ்வான் என்று அண்ணன் மயில்சாமி அவர்கள் சொல்லியிருக்கிறார் .... அந்த நல்லவருக்கே காரியம் பண்றமாதிரி பண்ணிட்டிங்களே விவேக் ... நீங்க இரண்டு வருடங்களுக்கு முன் ஈழத்தில் எங்கள் ஊருக்கு வந்து எங்கள் சிவானந்த வித்யாலயத்தில் நட்ட மரம் இனி எங்களுக்கு அது வெறும் வேம்பு மரம் அல்ல விவேக்மரம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை மனமார இறைஞ்சி நிற்கிறேன் ... ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
There are so many merciless people living in this world. Why they are not dieing instead of very good peoples. No God here.Good people are more than to God
விவேக்க தகனம் பன்னற வரை கூடவே இருந்தார் மயில்சாமி நேத்து விவேக் ஒய்ப் பிரஸ் மீட்டுலயும் மயில்சாமி இருந்தாப்ல....spb ஐயா சாவுலயும் கூடவே இருந்தாப்ல கடைசியா தாமரை பூ மாலை spb ஐயா உடலுக்கு போட்டதும் மயில்சாமி கொண்டு போன மாலையாம்..... நல்ல மனுசன்யா .. miss u vivek sir..
மயில்சாமி சார் நம்ம தேவகுரலோன் எஸ்பிபி சார் இறந்தபோதும் சரி நம்ம நகைசுவை நடிகர் விவேக் இறந்தபோதும் சரி முதலாவதாக வந்து கலந்து கொண்ட மனிதாபிமானம் உள்ள நம்ம மயில் சாமி சார் தான்
விவேக் ஐயா! உங்கள் இறுதி நிகழ்விலும் மயில்சாமி அவர்கள் முன்னின்று நடத்தி கொண்டிருந்ததை காணொளியில் பார்த்தேன். நீங்கள் போய் விட்டீர்கள்.இதயம் கனக்கிறது. மயில்சாமி அவர் குடும்பம் நீடூழி வாழட்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Shamtha and saru latha..ஒரு சின்ன விளக்கம்... நல்லவர்களை எல்லோருக்கும் பிடிக்கும் இறைவனுக்கு.. பிடிக்கும் என்பதால் சீக்கிரம் போய்விடுகிறார்கள் போலும்..கெட்டவர்கள் என்று இங்கு யாரும் இல்லை ஆனால் அறியாமையால் கெட்ட விடயங்களை அதிகமாக செய்தவர்களின் செயல்களை பிடிக்காததால் அவர்கள் திருந்துவதற்கு இறைவனால் அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் அதன் பொருட்டு இறைவனின் அருளால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்
இந்த மடலை மனோகர் கோவையில் இருந்து எழுதுகிறேன் மயில் சாமி 1989/90 களில் கோவையில் எனது சுப்பர் மார்க்கெட்டிங் சூட்டிங் நடத்த அனுமதி பெற வந்த போது மிகவும் ஆரம்ப காலங்களில் மிகவும் எளிமையாக நடந்து கொள்வார் இன்றைய நாளிலும் அதே மாதிரி தான் என்றால் அது மிகையாகாது நல்லவன் வாழ்வான்
மனம் திறந்து பாராட்ட நல்ல மனது வேண்டும். கண்ணீர் தளும்ப பார்த்தேன் உங்கள் உரையை. அருமையான பேச்சு ஏற்கனவே மயில்சாமி யின் வள்ளல் தன்மை குறித்து கேள்விபட்டுள்ளேன் மீண்டும் இன்று விவேக் அவர்கள் மூலம் அறியும்போது மட்டற்ற மகிழ்ச்சி. உங்களை மீண்டும் எப்போது பாப்போம்
மயில்சாமியின் மனிதரின் உண்மை முகம் சொல்லும் இந்த நல்ல உள்ளம் கொண்ட மறைந்த விவேக் அண்ணாவின் இந்த பேச்சில் மற்ற கலைஞர்களின் மேல் கொண்ட அவரின் அன்பு சொல்ல வார்த்தைகள் இல்லை விவேக் அண்ணாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்க தோனுது அண்ணாவின் ஆன்மா சாந்தியடைட்டும் மயில்சாமியின் அண்ணாவின் நல்ல மனதுக்கு ஆண்டவன் துணையிருப்பார்
நல்ல மனிதர் "சின்ன கலைவாணர் விவேக்" அவர்கள் மற்றும் "இசை குயில் எஸ் பி பாலசுப்பிரமணியம்" இருவரும் இல்லாததை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது... இருவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭😭
போன வருடம் SPB அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்றார், அந்த பெருந்துயரில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறோம், அதற்குள் நீங்களும் சென்றுவிட்டீர்களே விவேக் சார். 😢😢.. ஏன் இவ்வளவு அவசரம்.. மனம் வலிக்கிறது.. 😭😭
@@sathishDURAISAMY yes sir. SPB sir,Vivek sir and Mayilsamy sir ellam innum 25 varudangal uyirodu irundhu irukalame nu oru aadhangam than sir ellorukum iruku.thank you sir🙏🥰
சமூக ஆர்வலர், பகுத்தறிவாளி, மனித நேயம் மிக்க கலைஞன் தமிழக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பீர்.. இருப்பினும் மனம் இன்னும் நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது
WHAT A GREAT PERSONALITY....SEE HOW HE ADMIRES MR.MAYILSAMY, AND SEE HOW HE APPRECIATES HIS TENDER- BIGHEARTEDNESS...AND FINALLY HIS REQUESTS TO THE MEDIAS IN ORDER TO HELP THE SMALL BUDGET MOVIES...RIP-VIVEK
அருமை விவேக் மயில்சாமி, சில நடிகர்கள் சுய விளம்பரம் பொது வாழ்க்கை என்ற நுழைவாயிலில் நுழையும் போது ஆனவ பொறுப்பற்ற மக்கள் விரோத பேச்சுகளால் அந்த பல நூறு குடும்பங்கள் பாதிக்கபட மூலகாரணமாக இருக்குது.
விவேக் சார் மயில்சாமி சார் இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பேச்சு அவ்வளவு நகைச்சுவை இருவரையும் நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் இன்று நீங்கள் இருவரும் இல்லை என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறது நிறைய டைம் இந்த வீடியோவை பார்த்து விட்டேன் சார்👏👌👍😭🙏
விவேக் மிகவும் விவேகம் நிறைந்த மனிதர். இந்த உலகில் மிகவும் கற்றறிந்த பெரிய பெரிய விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்கள் கூட ஒரு சில அறுவருப்பான பழமைக்கு பலியாகி கிடக்கின்றனர். இந்த மாமனிதரின் தத்துவம் நமக்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம். அவருடைய கொள்கைகளை உள் வாங்குவது மட்டுமே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.
தனிவாழ்வில் தூய்மை...பொதுவாழ்வில் நேர்மை-(சுவாமி விவேகனந்தர்) அண்ணன் விவேக் சொல்வதை பார்க்கும்போது விவேகனந்தரே சொல்வதாக உணர்கின்றேன்...தனி வாழ்வில் தவறு செய்ய நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்ள நினைக்க தூண்டுகிறது இம்மாதிரியான சொற்கள் நன்றி விவேக் அண்ணா நீங்கள் பிரிந்தாலும் நீங்கள் பேசிய வார்த்தைகள் என்றும் உலகம் உள்ளவரை நினைவில் இருக்கும்🙏🙏