நடந்ததைக் கதைத்து பலனேதுமில்லை. இவா விட்டது தவறே. ஆயினும் அந்த ஜென்ரில் மான் ஏதோ நேற்றுவந்து உயரம் நீளமெல்லாம் பாய்ந்து தன் ஒலிம்பிக் கேடயத்தை எடுத்துக்கொண்டு இன்று போகவில்லை. இந்தப் பிள்ளையின் வயது 15. ஆகவே 16 வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார். மூத்த மனைவியை விட்டு தனிய இருக்கும் போது தான் இவாவும் தடக்குப்பட்டவா. ஆகவே இது ஒரு கள்ள உறவு என்ற வகையில் வராது. அவரின் அளவுக்கதிகமான பணத்தில் இரண்டு பேரையும் வாடைக்காத்துக்கு இங்கையும் சோளகக்காத்துக்கு அங்கையுமென தன் இடைவிடாத வாழ்க்கையை மில் எஞ்சின் போல இயக்க எண்ணியிருக்கிறார். இனி இந்தமனிசியில் உறிஞ்சக்கூட ஒருதுளி ரத்தமில்லை.நுளம்பு குத்தினாக்கூட ஏமாந்துதான் போகும்.இந்த இடத்தில் நீங்கள் அவர்களுக்குச் சொல்லும் அறிவுரை உங்கள் முயற்சியால் என் போன்றவர்களிடம் நட்டாற்றில் நிற்பதுபோல் நின்று உதவிகளைப் பெற்று ஓரளவு வறுமை நீங்கி பசியென்றறியாது வாழ நேரும் பட்சத்தில் கூட அந்த ஜென்மத்தை அண்டியிடக்கூடாது என்பதே. பாவம்.நிலைதடுமாறிக் கதைத்தாலும் அவாவுக்குள்ளும் வேதனை நிறைய இருக்கு. இதயம் வெடிக்கிறமாதிரி ஒரு கதை சொன்னா."தங்கைச்சி தரும் சாப்பாட்டை பிள்ளைகள் வரும்வரை பார்த்து அவர்கள் உண்டிருந்தால் தான் சாப்பிடுவேனென்று. *ஒருவேளை நானுண்டு பின் அவர்கள் பசியுடன் வந்தால் தன்னால் தாங்கமுடியாது*என்றா. உதவி வேண்டும் தம்பி. கோழி-நான் நினைக்கவில்லை முழுவதுமாக அவர்கள் வறுமையைப்போக்குமென. அப்படியாயின் 50 கோழியாவது வேணும். இவர்களுக்கு மாடே சரியான தெரிவு. கொடுத்த 60 ஆயிரம் ரூபாயில் 45 சைக்கிளுக்குப் போக மிகுதி15 இல்"பழைய சைக்கிளைத் திருத்தவும், ஒன்றிரண்டு மாதத்திற்கான அரிசி-தேங்காய்-செத்தல்-உட்பட இதரபொருட்கள் வாங்கவும்,5ஆயிரம் ரூபா கரண்ட் பில் கட்டவும் போதாது. இதைவிட ஒரு 10 ஆயிரம் தன்னும் உப்புப்புளிக்கோ,சோப்பு-சலவைத்தூளுக்கோ என சின்னச்சின்னத் தேவைகளுக்கென்று காசாய் கையில் வேணும். ஆகையால் தயவு செய்து ஒரு குறுகிய இடைவெளியில் ஒருசிறுதொகைப் பணத்தை மேலதிகமாக வழங்க முயற்சி செய்யுங்க.ஒரு ரத்த உறவாய் ஏதோவொரு மனத்தாக்கத்தில் என்மனதுக்குப் பட்டதைச் சொன்னேன். பிழையிருக்கும். பொறுத்தருள்க.