பொய்யான உலகத்தில் முழுமையாக மூழ்கிய நிலையில் வாழ்ந்து வருவதால் இந்த உரையை கேட்பதற்கு புரியாமல் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இறைவனின் ஒவ்வொரு பண்புகளை சிந்திக்கும் ஒருவரால் புரிந்து செயல் பட முடியும்..... ஒரு புது இறை சமூகத்தை உருவாக்க நினைக்கும் சகோதரருக்கு எனது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்....
வளரும் மருப் பொருட்களின் குவியலில் மாட்டிக்கொண்டேன். இதில் வினை பயனும் உள்ளே இழுக்கிறது. இறைவா உறு பொருட்களை சேர்க்க வேண்டும் என்று மனதில் என்னத்தை கொடு
செம்மை வாழ்வு என்றால் உண்மையான வாழ்வு அல்லது சிவம் அருளும் வாழ்வு என்று எடுத்துக் கொள்ளலாம். எதிர்பார்ப்புகளும், முயற்சிகளும் அதிகமாக இருந்தால் துயரங்களும் அதிகமாக இருக்கும். 'உறுபொருள் சேர்க்கை உண்மையை வெளிப்படுத்த மறுபொருள் சேர்க்கை சிதைவை காட்டுமாம்' என்பது மறைமொழி. ஆசானுக்கு இந்த மறைமொழி உணர்த்தப்பட்டது. நீங்கள் முயற்சி செய்யாமல்,எதிர்பார்க்காமல் எது தானாக வந்து அடைகிறதோ அதுவே உறுபொருள் சேர்க்கை. உதாரணம் நமக்கு கொடுக்கப்பட்ட உடல் ஒரு உறுபொருள். நாம் முயற்சி செய்து இந்த உடலை பெறவில்லை. அது போலவே இந்த மழை, நிலம்,தாவரம் எல்லாமே உறுபொருள். நம் ஐம்புலன்கள் ஒரு சேர்க்கையில் அமைந்து நமக்கு உண்மையை வெளிப்படுத்துகின்றன. உண்மை என்றால் என்ன? எதற்கு நோக்கமில்லையோ அதுவே உண்மை. அதே நேரத்தில் நோக்கமற்று இருத்தலும் பொறுப்பற்று இருத்தலும் ஒன்று கிடையாது.இன்று தனிப்பட்ட மனிதனின் நோக்கம் மனிதனின் வாழ்வை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்த பூமியில் நீங்கள் பிறந்தமைக்கு காரணம் நிம்மதியாக இன்பமாக வாழவா அல்லது நோக்கத்தை நிறைவேற்றவா. நிம்மதியாக வாழ என்றால் உறுபொருள் வந்து உங்களை சேரும். வாழ்க்கையில் உறுபொருள் சேர்க்கையின் மீது விருப்பம் வேண்டும். என் முயற்சியால் கிடைப்பது வேண்டாம். உன் அருளால் எனக்கு உறுபொருள் கிடைக்க வேண்டும் என்று அம்மையப்பனிடம் வேண்டும் மனம் வேண்டும். முயற்சியின் அடிப்படை என்ன? அதை புரிந்து கொள்ள அது இயல்பான விருப்பமா அல்லது ஆசையா என்பதை பிரித்துணர தெரிய வேண்டும். எப்படி பிரித்துணர்வது? தவழும் குழந்தைக்கு ஓடியாடும் சிறுவர்களை பார்த்தால் இயல்பாகவே தானும் எழுந்து நடக்க வேண்டும் என்ற விருப்பம் வரும். அதே நேரத்தில் தான் தவழுவதையும் மகிழ்வுடன் செய்யும். இரவெல்லாம் தூக்கமில்லாமல் நிம்மதியில்லாமல் தன்னால் நடக்க முடியவில்லையே என்று தவிக்காது. மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற பல லட்சம் மாணவர்கள் போட்டி போடுகிறார்கள். சில ஆயிரம் பேர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். மீதி பேர் நொந்து மன அழுத்தம் கொள்கிறார்கள். சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? புறத்தில் இருந்து வரும் தூண்டலும் அழுத்தமும் தான். இது உருபொருள் அல்ல. கல்வி என்றால் என்ன? குழந்தைகள் தன் இயல்பு திறனை அறிந்து கொள்ள உதவுவது. இதைத் தான் மரபுக் கல்வி செய்கிறது. மரபுக்கல்வியில் பயிலும் மாணவர்கள் தன் இயல்பு திறனை வெளிப்படுத்துவார்கள். அப்படி வெளிப்படுத்தினால் அங்கே உண்மை இருக்கும். உள்நோக்கம் இருக்காது. அவர்கள் இன்பமான சூழலையே உருவாக்குவார்கள். மாறாக இப்போது போலி சாமியாரிடம் கூட்டம் அலைமோதுவதும் சித்தர் வாழ்ந்த மறைந்த இடத்தில் அவர்கள் சிலைக்கு விளக்கு ஏற்ற கூட ஆள் இல்லாமல் இருப்பதையும் பார்த்தால், மறுபொருள் சேர்க்கையே அதிகமாக உள்ளது என்பது புரியும். சுமையற்ற வாழ்க்கை வாழ ஒரு வழி தான் உண்டு. அது உருபொருளை ஏற்றுக்கொள்வது. உங்கள் மீது உங்களுக்கு அன்பு இருக்க வேண்டும். உங்களை நீங்கள் துன்புறுத்தி கொள்கிறீர்கள்.அதை நீங்கள் நியாயப்படுத்தி கொள்கிறீர்கள். 'நான் இவ்வளவு பாடுபடுவது எதற்கு தெரியுமா?' என்று வசனம் பேசுகிறீர்கள்.இது உங்கள் மீது உங்களுக்கு அன்பு இல்லை என்பதை காட்டுகிறது.
தமிழ், நான் மதுராந்தகம், ஜெகதீஸ்வரன், இந்த மாதம் பாபநாசம் வகுப்பிற்கு வந்திருந்தேன். "இயல்பு" குறித்து நிறைய கேட்டேன். இந்த "உறு பொருள் நலம் " உரையை பல ஆயிரம் பேர் கேட்க்கலாம், ஆனால் இந்த உரை எனக்கே உறைத்தது என்று நினைக்கிறேன். இயல்பு குறித்து அணைத்து சந்தேகமும் தீர்ந்தது. நல்ல தெளிவு கிடைத்தது. இறைக்கு நண்றி.
செந்தமிழன் அண்ணா அவர்களின் கருத்துக்களுக்கு முற்றுலும் உடன்பட்டவனாக இருந்தேன். ஆனால் கடந்த சில மாதங்களாக நிறைய கேள்விகள் , அவரின் கூற்றுகளை கேள்விக்குள்ளாக்குகின்றன 1. அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டதென்றால் ஏன் இவ்வளவு ஏற்ற தாழ்வு மனிதர்களுக்குள். எப்படி சில ஜாதியினர் மற்றவர்களை ஒடுக்கி , அடிமை படுத்தி இதனை ஆண்டுகாலம் வாழ்ந்தனர் இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர். 2.திருநாவுக்கரசர் போன்றோர் சீர் திருத்தம் செய்தாலும் ,என்ன பெரிய மற்றம் வந்துவிட்டது. ஏழை ஏழையாவே சுரண்டப்பட்டுக்கொண்டும், பணக்காரன் தவறுகள் செய்தலும் நன்றாக வாழ்ந்து கொண்டும் தான் உள்ளனர். நீங்கள் 10 எடுத்துக்காட்டுகள் தரலாம்.ஆனால் கோடிமக்கள் சுரண்ட பட்டுகொண்டுதான் உள்ளனர் 3. எப்படி எங்கேயோ இருக்கும் சில நாடுகள்,நிறுவனங்கள் செய்யும் தவறுகள் அணைத்து மக்களையும் பாதிக்கிறது. ஆப்பிரிக்க குழந்தை அங்கு பிறந்ததை தவிர அது என்ன தவறு செய்தது. ஆப்பிரிக்காவை சுரண்டிய மேற்கு நாடுகள் வளமாக உள்ளன .ஆனால் ஆப்பிரிக்க இன்னும் தத்தளிக்கிறது . எப்படி அமெரிக்க போன்ற நாடுகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மற்ற நாடுகள் மேல் போர் தொடுத்து கொண்டே உள்ளனர்? 4. ஏன் இன்பமாக நோய் நொடி இல்லாமல் வாழ்வது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. நீங்கள் என்னதான் ,இது எளிமையானது என்று கூறினாலும், அது ஏன் எல்லருக்கும் அமையவில்லை? படைத்த இறைவன் இதை ஏன் எல்லோருக்கும் உணர்த்தவில்லை . நீங்கள் இறைவன் உணர்த்த துடிக்கிறான் , என்று கூறினாலும், ஏன் மனிதர்களை உணர துடிக்க வைக்கவில்லை 5. விஜய நகர அரசு தமிழகத்தை கைப்பற்றும் வரை, தமிழகம் நெறியோடு இருந்தது என்கிறீர்கள்? பிறகு ஏன் தமிழகம் இறைவனால் காக்கப்படவில்லை? நெறி பிறழ்ந்த அரசர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை? 6. நடக்கும் அனைத்து நன்மைக்கும் இறைவன் பொறுப்பு, தீமைகளுக்கு மனிதர்கள் பொறுப்பு என்பது பிழையான வாதம் 7. வரலாறு நெடுகிலும்,இப்பொழுதும் இறைவனின் பெயரால் தான் மனிதர்கள் பிளவு படுத்த படுகிறார்கள், அடிமை படுத்த படுகிறார்கள் , சுரண்ட படுகிறார்கள். இறைவன் எதையும் தடுக்கவில்லை.ஆனால் நீங்கள் இறைமறுப்பாளர்களை நிறைய முறை சாடி இருக்கிறீர்கள்.ஆனால் எந்த இறைமறுப்பு கொள்கையின் பெயராலும், எந்த அநீதியும் மக்களுக்கு நடந்தது இல்லை. 8. நன்மைகள் இறைவனின் கருணை என்றால், தீமைகள் இறைவனின் கோவம் தானே? 9. எனக்கு இறைவன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது . ஆனால் இறைவன் மிகவும் பராபட்சமானவன் என்பது மட்டும் தெரிகிறது
உங்களின் தெளிவற்ற புரிதலில் பேசுகிறீர்கள் நன்கு தெரிகிறது. செந்தமிழன் அண்ணா போன்று உண்மையான இறை உணர்தலை இங்கு யாரும் பிறருக்கு உணர்த்தவில்லை என்பதே நிதர்சனம். அவர்மீது ஏதோ குறை கூறவேண்டும் என்பதற்காக எதையும் கூறாதீர்கள்
@@user-rg7ls6zp7y அவர் மீது குறை சொல்லவில்லை. தெளிவாக படியுங்கள். அவரின் கருத்துகளில் உள்ள மாறுபட்டை தான் கூறி உள்ளேன். பொத்தான் பொதுவாக கூறாமல் எனது எந்த கருத்தில் புரிதல் குறைபாடு உள்ளது என்று கூறினால் நலம்.
@@RajaN-rx5yb செந்தமிழன் அண்ணாவின் கருத்துக்களை பொறுமையாக உள்வாங்கி கேளுங்கள். நீங்கள் உள்வாங்கினால் அவர் பேசுபவை அனைத்தும் இறையால் அருளப்பட்டவை என்பது புரியும். இறை உணர்தலின்றி எவராலும் இதுபோன்று பேசமுடியாது என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்
@@user-rg7ls6zp7y நன்றி. முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். அவரின் கருத்துக்கள் இறையால் அருளப்பட்டவையே. அவரின் ஒவ்வொரு காணொளியை யம் பதிவிறக்கம் செய்து கேட்டுக்கொண்டிருப்பவன் நான். அவரின் இயற்கை பற்றிய, இயற்கை சுரண்டல் பற்றிய , மருத்துவம் பற்றிய அனைத்தும் நான் உடன் படுபவனே. ஆனால் எனது அடிப்படை கேள்வி ஏன் இறைவன் பாரபட்சமாக உள்ளான்.ஏன் இறை அனைவரையும் சமமாக நடத்தவில்லை என்பதைத்தான் கேட்டுள்ளேன். எனது எந்த கேள்வியில் புரிதல் குறைபாடு உள்ளது? செந்தமிழன் அண்ணாவிற்கு இறை அருள் உள்ளது என்பதினால் முரண்பாட்டை கேட்காமல் இருக்க வேண்டியது இல்லை. தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். அவர் சொல்வதை கேள்வி கேட்காமல் கேட்க வேண்டும் என்று சொல்லி,அவரையும் சாமியார் ஆக்கி விடாதீர்கள்
@@RajaN-rx5yb இறைவன் பாரபட்சம் உடையவர் என்று எதைக் கொண்டு சொல்கிறீர்கள்? இங்கு நாம் சமுகத்தில் காணும் பாரபட்சங்கள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நாம் உருவாக்கியவையே. இறையை மனிதர்களிடத்தில் தேடாமல் இயற்கையில் தேடி பாருங்கள். உங்களுக்குண்டான ஐயங்கள் நீங்கும்.