உங்களுக்கு நன்றி மேடம் அருமையான பதிவு போடுங்க தலைவர் எம்ஜிஆர் அவரை பற்றி இன்னும் 200 வருஷம் போனாலும் எம்ஜிஆர் வெல்லவே முடியாது எவராலும் இன்னும் பிறக்கவில்லை எம்ஜிஆர்
அற்புத தலைவருக்கு சிறப்புமிகு வார்த்தைகளால புரட்சித் தலைவரின் புகழை நீ பூவுலகம் இருக்கும் வரை நினைத்துக் கொண்டே இருக்கும் இருக்கும் அன்புச் சகோதரிக்கு ஆயிரம் ஆயிரம் சல்யூட்
என் நினைவு சரியாக இருக்குமானால் எங்கள் ஊரில் (திருப்புறம்பயம்) வினாயகர் சதுர்த்தி தேனாபிசேகம் விழாவில் நடுவர் சோ - சத்தியசீலன் அவர்களின் பட்டிமன்றத்தில் பேசியுள்ளார்
Sister, I do not know how to praise you. You are truly one of the Deivam MGR fan. I pray God on behalf of crores fans of Deivam MGR, to offer all the welfare to you and all of your family members. Thanks sister pl.continue such this service.
Really very interesting to hear his hard and noble services induced in his movies.He would watch every scene very carefully and let the movie develop.MGR is always great.
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் அவர்களின் தயாரிப்பு, நடிப்பு, இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான உலகம் சுற்றும் வாலிபன் பல இன்னல்களுக்கு மத்தியில் தி.மு.க ஆட்சியில் பல எதிர்ப்புகள் இருந்தும் விளம்பரம் இல்லாமல் சுவரொட்டிகள் இல்லாமல், அதே நேரத்தில் மதுரை முத்து அவர்கள் தி.மு.க) உ சு வாலிபன் படம் வெளியிடமுடியாது சவால் விடுகிறேன். அப்படி வெளியிட்டால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்றார். கதை அவ்வளவதான் . இவற்றைஎல்லாம் எதிர்கொண்டு உலகம்பூரா வீறுநடை போட வந்தான் உலகம் சுற்றும் வாலிபன் .100, 150, 175, 200, 250, 300நாட்கள் ஏன் வருடக்கணக்கில் கூட ஓடியதாக நடிகை மஞ்சளா ஒரு பேட்டியில் கூறி இருந்தா. வெற்றிவிழா, வெள்ளிவிழா, வைரவிழா. அதுமட்டுமா நாடுகடந்து சிங்கப்பூர், மலேசியா இலங்கை போன்ற நாடுகளிலும் அமோக வரவேற்புடன் உலகம் சுற்றினான். இலங்கையில் கெபிட்டல் திரையரங்கில் ( கொழும்பு) 239 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. இலங்கை ஏனைய பகுதிகளிலும் சாதனை படைத்தது. இதில் முக்கிய சாதனை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். 1977க்கு முன்னாடி யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் சில வேளைகளில் ஜனத்திரள் காரணமாக இருதிரைகளில் ஓட்டுவார்கள் அடிமைப்பெண், இதயவீணை, வசந்த மாளிகை, ரிக்ஷாக்காரன், குமரிக்கோட்டம், என் அண்ணன் குறிப்பிடத்தக்கது. சரி விசயத்துக்கு வருகிறேன்.1977 க்கு முன்னாடி தனியார் கையில் விரும்பிய படத்தை வாங்கிக்கொள்வது கடையில் பொருட்கள் கொள்வனவு செய்வதுபோல். அப்போ 1977 லிருந்து புதிய அரசாங்கம். இதிலிருந்து அரசுடமை. அரசு கொடுக்கும் படத்தைதான் திரையரங்கில் ஓட விடவேண்டும் . அதே சமயத்தில் யாழில் முன்புபோல் இரு தியேட்டர்ல ஓடவிடாமல் ஒரு தியேட்டரில் மட்டும்தான் படம் ஓடும். இதுதான் அரசாங்கச்சட்டம் ஆனால் உலகம் சுற்றும் வாலிபனுக்கு மட்டும்தான் விதிவிலக்கப்பட்டது. அதாவது மனோகரா, ஸ்ரீதர் என இருதிரைகளில் வெற்றிநடை போட்டு வலம் வந்தான் உலகம் சுற்றும் வாலிபன். இது மறக்க முடியாத நிகழ்வாகும். இது யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் இது சாதனை யாகும். இது வாலிபனுக்குக் கிடைத்த அங்கிகாரமாகும். இத்தகவல்களை எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்கள், எம்ஜிஆர் பக்தர்கள். எம்ஜிஆர் பக்தர்களில் கோடியில் நானும் ஒருவன். இத்தகவல் எப்படியிருக்கின்றது என்பதை கொமென்ஸ் பண்ணுங்கள். நன்றி வாழ்க புரட்சித்தலைவர் புகழ்.