சன்னியாசத்தை விட சம்சாரி வாழ்க்கையே சிறந்தது என்பதை ஊருக்கு சொல்லும் அழகான பாடல் tmsம். சீர்காழியாரும் போட்டி போட்டுக்கொணாடு பாடும் பாடல் அதை அழகாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினால் உணரும் வகையில் காட்சியில் புரட்சித் தலைவரும் நாகேஷ்ம் ப்ரெஸென்ட் செய்வது அலாதி இனபம் புரட்சித்தலைவர் பாடியாகிவிட்டது இனிமே ல் நீங்களும் சம்சாரி வாழ்க்கையே சிறந்தது என்போம் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
இந்த பாடல் என் அப்பாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல் எம்.ஜி.ஆர் நாகேஷ் இருவரின் நடிப்பு அருமை அவர்களே பாடுவது போலவே இருக்கும் என்று சொல்வார்கள்.. இப்போது அப்பா இல்லை இந்த பாடலை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது குரல் அரசர் டி.எம்.சௌந்தரராஜன் மணியோசை குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் குரலில் அருமை
இந்த பொண்டாட்டி அவங்க அவங்க குடும்பம் என்றால் எல்லாத்தையும் அரவணைத்து போறாங்க😢 கணவன் குடும்பத்தாரை மதிப்பதில்லை😢 அவர்களை ரொம்ப அசிங்கப்படுத்தி அவமானப் படுத்துகிறார்கள்
This fantastic and meaningful song which is nothing but real and it will fit for this generation. They won't go as sanyasi u stead they look for alternative. That is highly condemnable. They should live together for ever shedding their difference of opinion and reposting trust mutually and helping each other and showing loving care to both sides of family. My father who loved this song when we used to hear in Radios. Excellent song. Look the beautiful appearance of MGR and his simplicity with endearing style. That is MGR, SIR.😊
காசிக்கு எப்போதும் யாரும் போகலாம்.சாமியார்கள் மற்றும் வயதானவர்கள் தான் போக வேண்டும் என்று சொல்வது தவறு.இருவரும் பாடுவது சிறந்த அர்த்தங்கள் கொண்டவை.வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று சொல்வது நன்றாக இருக்கிறது .அவளை விடவா உயர்ந்தது காசி . நாத்திகம் ஆத்திகம் இடையே நடப்பது
பாடல் வரிகள் பா.எண் - 391 படம் - சந்தோரதயம் 1966 இசை - M.S.விஸ்வநாதன் பாடியவர் - TMS & சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர் - வாலி பாடல் - காசிக்குப் போகும் சந்நியாசி காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி கங்கைக்குப் போகும் பரதேசி…………………… கங்கைக்குப் போகும் பரதேசி நீ நேத்து வரையிலும் சுகவாசி காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி பட்டது போதும் பெண்ணாலே பட்டது போதும் பெண்ணாலே இதை பட்டினத்தாரும் சொன்னாரே பட்டது போதும் பெண்ணாலே இதை பட்டினத்தாரும் சொன்னாரே அவ சுட்டது போதும் …ம்ம்ம்ம்ம் சிவசிவ சிவனே சிவசிவ சிவனே சிவசிவ சிவனே சிவசிவ சிவனே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ சிவனே ஆஆஆஆஆஆஆஆ சுட்டது போதும் சொல்லாலே நான் சுகப்படவில்லை அவளாலே சுட்டது போதும் சொல்லாலே நான் சுகப்படவில்லை அவளாலே காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு என்னை இனிமேலாவது வாழ விடு ஆதரவான வார்த்தையைப் பேசி அருமை மிகுந்த மனைவியை நேசி ஆதரவான வார்த்தையைப் பேசி அருமை மிகுந்த மனைவியை நேசி அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி அவளை விடவா உயர்ந்தது காசி அவதிப் படுபவன் படுசம்சாரி அப்பா நீயோ பிரம்மச்சாரி அவதிப் படுபவன் படுசம்சாரி அப்பா நீயோ பிரம்மச்சாரி தலையணை மந்திரம் மூளையை தடுக்கும் தாரக மந்திரம் மோட்சத்தைக் கொடுக்கும் தாரக மந்திரம் மோட்சத்தைக் கொடுக்கும் காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு என்னை இனிமேலாவது வாழ விடு இல்லறம் என்பது நல்லறமாகும் இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும் இல்லறம் என்பது நல்லறமாகும் இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும் குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும் கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும் பக்தியின் வடிவம் சந்நியாசம் புண்ணியவான்கள் சகவாசம் அதுவே சந்தோஷம் சக்தியின் வடிவம் சம்சாரம் அவளே அன்பின் அவதாரம் வேண்டாம் வெளி வேஷம் காசி நாதனே என் தெங்வம் கட்டிய மனைவி குலதெய்வம் காசி நாதனே என் தெய்வம் கட்டிய மனைவி குலதெய்வம் மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை மனைவி இல்லாமல் தெய்வமில்லை மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை மனைவி இல்லாமல் தெய்வமில்லை சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ அவள் துணையினைப் பிரிவது முறையோ பகைதான் வளரும் பகையே அன்பாய் மலரும் பிரிந்தவர் இணைந்திட படுமோ மணந்தவர் பிரிந்திடத் தகுமோ இல்லறம் இல்லறமே காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கணவன் மனைவி பிணக்கு என்ற இல்லறத்தின் இயல்பை சொல்லும் பாடல் காட்சி... காசிக்கு போகும் சீர்காழி கோவிந்தராஜன்.. காசிக்கு போகாத சௌந்தரராஜன்.. அறிவுரை சொல்லும் பிரம்மச்சாரி எம் ஜி ஆர்.. சமாதானம் அடையாத தன் அவஸ்தை பாடும் குடும்பஸ்தன் நாகேஷ். சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்காத ஆச்சி மனோரமா.. அறிவை பெற்று விட்டதாக பெருமை கொள்ளும் ஆறறிவு ஜீவன் .. அது தன் மன அமைதியை இல்லறத்தில் இழந்த விடுவதுதான் உலக கொடுமை.. ஆதாம் ஏவாள் காலத்திலேயே தொடங்கிவிட்ட பனிப்போர் இது...