ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரானது போர்களுக்கெல்லாம் தாயாக இருந்தது. அனைத்து மன்னர்களும் நூற்றுவர்களோடோ அல்லது ஐவர்களோடோ இணைந்து போரில் ஈடுபட்டனர். அத்தகைய மாபெரும் போரில் நடுநிலையாக மன்னர் உடுப்பி இருந்தார். அவர் கிருஷ்ணரிடம் ‘போர்களில் ஈடுபடுவோர் உணவருந்த வேண்டும். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன்" என்றார். இன்றும் உடுப்பி மக்களில் பலர் உணவளிக்கும் நபர்களாக உணவகங்களை நடத்துபவர்களாக இருக்கின்றனர்.
வீணாகாத உணவு
பதினெட்டு நாள்கள் அந்த போர் நீடித்தது, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்துக் கொண்டுருந்தனர். அதனால் உடுப்பி மன்னர் குறைந்த அளவிலான உணவை சமைக்க வேண்டி இருந்தது, இல்லையென்றால் உணவு வீணாகும் சூழல் ஏற்படும். ஆச்சரியம் என்னவென்றால் எந்தவொரு நாளும் உணவு வீணாகவே இல்லை. இத்தனைக்கும் ஒரு நாளில் எத்தனை வீரர்கள் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியிருந்தும் துல்லியமாக உணவை சமைத்து வீணாக்காமல் இருந்தது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
#Mahabaratham #UdupiHotel #KingUdupi #TKR
8 сен 2024