Тёмный
No video :(

குழந்தை உள்ள வீட்டில் செய்யக் கூடாதது  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 252
50% 1

குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் தவறுகள். இது குழந்தைகளின் உயிருக்கே கூட சில நேரங்களில் ஆபத்தைக் கூட விளைவிக்கும். அதைப் பற்றிப் பார்ப்போம்.
நாம் வீட்டில் ஏதாவது விஷயத்திற்குப் பயன்படுத்துவதற்காக மண்ணெண்ய் வாங்கி வைத்திருப்போம். அதை வாங்கி வைப்பதற்குப் பயன்படுத்திய காலி தண்ணர்ப் பாட்டில், காலி குளர்பான பாட்டில்கள் என்று ஏதாவது ஒன்றில் வாங்கி வைத்திருப்போம். இப்படி வைத்திருப்பதால் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் தெரியாமல் எடுத்துக் குடிக்க வாய்ப்புகள் இருக்கும். தின்னர்க் குடிதண்ணீர் பாட்டிலைப் போன்றே வெள்ளை நிறத்தில் இருப்பதாலும், நாம் வீட்டில் கழிப்பறைகள் போன்றவற்றைச் சுத்தம் செய்வதற்காக வாங்கி வைத்திருக்கும் பினாயில்கள் பல வண்ணங்களில், வாசனையுடன் இருப்பதால் சிறு குழந்தைகள் ரோஸ் கலரில் இருக்கும பினாயில்களை ரோஸ்மில்க் என நினைத்துக் குடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மண்ணெண்ணைப் போன்றவற்றை குழந்தைகள் குடித்து விட்டால் குழந்தையை வாந்தி எடுக்க வைக்கக் கட்டாயம் முயற்சி செய்யக் கூடாது. அப்படி வாந்தி எடுக்க முயற்சிக்கும் போது மண்ணெண்ணை அடர்த்தி அதிகமாக இருப்பதால் நூரையீரலைச் சென்று சேர்ந்து தொல்லை அதிமாகிவிடும். அதிக அளவு மண்ணெண்ணைக் குடித்துவிட்டால் மூளையைப் பாதித்து (ஜன்னி) காய்கைவலிப்பு வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க இந்த மாதிரியான பொருட்களைக் குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் பாதுகாப்பாக வைப்பது தான் நல்லது.

Опубликовано:

 

22 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
아이스크림으로 진짜 친구 구별하는법
00:17
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 547 тыс.