எழுத்தாளர் தி.ஜா. மிகச்சிறந்த கதையாசிரியர். ஆனால் தன்னைக் கதையாசிரியர் என்று சொல்லத் தயங்குகிறார். கதை என்பது என்ன?, கலையின் முக்கியத்துவம், கதையின் கருப்பொருளை எங்கிருந்து தேர்வது, தமக்கு முன் எழுதிய படைப்பாளர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டுமா?, கருவை எப்படி காட்சிப்படுத்துவது?, காட்சிகளை மனதில் நீணடகாலம் ஊறப்போட்டுப் பக்குவமாகியப் பிறகு எழுதத் தொடங்க வேண்டும் எனப் பல செய்திகளை இந்தக் கட்டுரையில் பேசியிருக்கிறார். கட்டாயமாக அனைவரும் வாசிக்க, விவாதிக்க வேண்டிய கட்டுரையாக அமைந்திருக்கிறது.
28 ноя 2020