தமிழக எழுத்தாளர்கள் குழுமம்’ நான்காம் சந்திப்பு; விழாத் துளிகள்
தமிழில் வரக்கூடிய வார - மாத இதழ்களில், தினசரி பத்திரிகைகளின் இணைப்பிதழ்களில் வாசகர் கடிதம், நகைச்சுவை, கவிதை, சிறுகதை, நாவல் என எழுதிவருகிற படைப்பாளர்கள் தங்களுக்குள் கலந்து பழகுவதற்காக, பேனா நட்பை பலப்படுத்திக் கொள்வதற்காக ‘தமிழக எழுத்தாளர்கள் குழுமம்’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றினை உருவாக்கியிருக்கிறார்கள்.
எழுத்தாளர் சாவி, பாக்கியம் ராமசாமி போன்றோரின் வாரிசு என்கிற அளவுக்கு நகைச்சுவை எழுத்துகளால் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற மூத்த எழுத்தாளர் நந்து சுந்து நந்தகுமார் தான் எழுதிவருகிற முகநூல் பதிவுகளுக்கு கிடைத்திருக்கிற வரவேற்பு, பத்திரிகைகளுக்கு ஒருபக்கக் கதைகள் அனுப்புவதில் கடைப்பிடிக்கிற சூட்சுமம், ஆன்மிக எழுத்துக்களிலும் தடம் பதிக்கும் திறமை, சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுவருகிற அனுபவம் குறித்தெல்லாம் விரிவாக பகிர்ந்தார்.
திரை வடிவம் : காரைக்கால் கே.பிரபாகரன்
இது நேசம் மீடியா தயாரிப்பு
வர்த்தகத் தொடர்புக்கு :
9488992571
28 май 2018