Alhamdhulillah உங்களுடைய துஆக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக ஆமீன்..... உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை எங்களுக்கும் கிடைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.....
மாஷாஅல்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கு. தங்களது மனதில் ஈமானை நிலை நிறுத்தி தங்களது ஆயுட்காலம் வரை இந்த இறைபணி தொடர்ந்து செய்து வர எல்லாம் வல்ல இறைவன் அருள் பெற துவா செய்கிறேன். சகோதரி🤲
நிச்சயமாகவே பூமியின் கருவூலங்களின் திறவுகோள்கள் அனைத்தும் பெருமானார் ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தும் பசியினால் அவர்களின் வயிற்றின்மீது கல்லை வைத்து புடைவையினாற் கட்டிக்கொள்வார்கள். பெருமானார் ﷺ அவர்களுக்காக மலைகள் தங்கமாக அவர்களை நாடி வந்தன. ஆயினும் பெருமானார் ﷺ அவர்களோ அவைகளை வேண்டாமென்று மறுத்தார்கள். ஆத்மீக வானவர்களுக்காக என் முதுகுப்புறத்தை விட்டு விடுங்கள் எனக்கூறி அவர்களுடைய தோழர்களுக்குப் பின்னால் நடப்பார்கள். அல்லாஹு தஆலாவுக்காகவே கோபிப்பார்கள். அவனுடைய பொருத்தத்தையே பொருந்திக் கொள்வார்கள். சிறந்தவர்களுடன் நட்புக் கொள்வார்கள். கண்ணியமுடையவர்களுக்குச் சங்கை செய்வார்கள். அவர்களுடன் பரிகாசம் பண்ணுவார்கள். ஏழை எளியோரை உகப்பார்கள். அவர்களுடனே அமர்ந்திருப்பார்கள். அவர்களின் நோயாளிகளை சந்திக்க செல்வார்கள். அல்லாஹுவுக்குப் பொருத்தமான அவன் விரும்பிய உள்ளமையேயன்றி அவர்கள் (எதையும்) சொல்லமாட்டார்கள். *அல்ஹதீஸ் (பர்ஸன்ஜி மவ்லித்)*
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அமர்ந்த இடத்தில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள் நீங்கள் பெரும் பாக்கிய சாலி ...... அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தருவானாக ஆமின்
Mashallah உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் சகோதரி அனைத்து பெண்களும் உங்களைப்போல் இருக்க வேண்டும் என்று நான் மிகவும் மிகவும் ஆசைப்படுகிறேன் ஆமீன் ஆமீன் May Allah always with you sister JAZAKALLAHU 🤲🤲💖💖
என் கண்கள் கலங்குகிறது ஃபாத்திமா அம்மா அவர்களே....😭😭எனக்கும் என் குடும்பத்தார்கும் துஆ செய்வீர்களாக.....🤝🤲அல்லாஹ் உங்களை மென்மேலும் வளர அருள்புரிவானாக....ஆமீன்...🥺🥺🤲🤲
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் தங்கள் வாழ் நாள் முழுவதும் ஈமானோட வாழ அல்லாஹ் கிருபை செய்வானாகவும் ஆமீன் ஆமீன்🤲🤲🤲 எங்கள் ஸலாம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வீர ஸஹாபாக்கள் ஷஹாபிகள் அனைவருக்கும் எங்கள் ஸலாம் ஆமீன் ஆமீன்🤲🤲🤲
SubhanAllah. i could not understand a single word what she is saying. still I feel this strong connection with her. just because we are sisters in Islam. A relationship that is above all relationships. The relationship of Emaan. May Allah keep you steadfast upon the Deen. much luvvvv again. wassalam
MashaAllah. We learnt Kalimantan thro our parents or by Ustad in madarasa whereas you have been merged into Islam in the presence of Kabaa. Allah is Great and Good.
யா அல்லாஹ் எஙகளுக்கும் இந்த. பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே எப்போது நாங்கள் காண்போம் இந்த இடத்தை எம்பெருமான் (ஸல்) அலைஹி வஸல்லம் பிறந்த மண் ணை எப்போது பார்ப்போம்
திருநபி கவலையோடு இருந்த இடம், என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.. இந்த உம்தத்துக்காக எத்தனை கஷ்டம். பலபேர் தொழுவதே இல்லை அல்லாஹ் காப்பாற்றட்டும்.அண்ணாளார் மீது ஸலவாத் சொல்லுங்கல் வெற்றி அடையுங்கள்.
*அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அற்புத தனிச்சிறப்புக்கள்!* ஏக இறை உள்ளமையின் பரிபூரண வெளிப்பாடான ஜோதி முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை படைப்புகளிலே அதிசிறந்த படைப்பாக இறைவன் வெளியாக்கினான். அகிலத்தில் வேறெந்த நபிக்கும் வழங்காத அற்புத சிறப்புக்களை தனது பேரன்பிற்குரிய உள்ளமை ஒளியான ஈருலக வேந்தர் கண்மணி நாயகம் முஸ்தபா ﷺ அவர்களுக்கே வழங்கினான். 1. கண்மணி நாயகம் ﷺ அவர்களின் திருமேனியிலும் அவர்களின் புனித ஆடையிலும் ஈ, எறும்பு, கொசு முதலிய பூச்சிகள் வந்து என்றுமே அமர்ந்ததில்லை ! 2. அருமை நாயகம் ﷺ அவர்களின் திருமேனி வியர்வையோ இயற்கையிலே அம்பர் கஸ்தூரியை விட மிகுந்த நறுமணம் கமழ்வதாக இருக்கும் ! பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் ஒரு பாதையில் நடந்து சென்றால் அப்பாதை முழுவதும் நறுமணம் கமழும். அந்நறுமணமானது காற்றில் சங்கமித்து அவர்களை தேடி வருபவர்களுக்கு வழிகாட்டும் ! 3. பெருமானார் நாயகம் ﷺ அவர்களுக்கு தம் வாழ்நாளில் ஒருமுறை கூட கொட்டாவி ஏற்ப்பட்டதில்லை ! 4. அகிலத்தின் அருளான அண்ணல் நாயகம் ﷺ அவர்களை அனைத்து விலங்குகளும் உயிரினங்களும் நேசித்தன. அருமை நாயகம் ﷺ அவர்களை கொடிய மிருகங்களும் புலிகளும் பணிந்து சங்கை செய்தன ! 5. ரசூலுல்லாஹ் நாயகம் ﷺ அவர்களுக்கு *பூமியின் திறவுகோள்கள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தன* *அன்னவர்கள் மறைவானவற்றையும் - முக்காலத்தையும் அறியும்* ஆற்றல் பெற்றவராக விளங்கினார்கள் ! 6. ரசூல் நாயகம் ﷺ அவர்கள் ஒரே நேரத்தில் தனக்கு முன்னுள்ளவற்றை காண்பதை போன்றே தனக்கு பின்னால் உள்ளவற்றையும், தொலைவில் இருப்பதையும், (மறைவானதையும்) ஏக நேரத்தில் காண்பவராக இருந்தார்கள் ! 7. மாநபி ﷺ அவர்கள் அதிக உயரமில்லை ஆனால் அவர்கள் அருகே மற்ற எவரும் வந்து நின்றால் அன்னவர்களே எப்பொழுதும் உயரமாக காட்சி தருவார்கள் ! 8. அருமை நாயகம் ﷺ அவர்கள் பூமியில் அவதரித்தபோது அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்ந்தன. அவர்கள் பிறக்கும்போதே கத்னா செய்யப்பட்டவர்களாக, கலிமா விரலை உயர்த்தியவர்களாக மிக பரிசுத்தமாகவே பிறந்தார்கள் ! 9. அண்ணல் நாயகம் ﷺ அவர்கள் ஒளிகளுக்கெல்லாம் மேலான ஒளியாவார்கள். அவர்களின் நிழல் சூரிய, சந்திர வெளிச்சத்தில் இப்புவியில் என்றுமே விழுந்ததில்லை ! 10. பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் வெளியிடும் சப்தம் அருகிலிருப்பவருக்கு உரத்ததாக தோன்றாது, ஆனால் தொலைதூரம் வரை சென்று கேட்கும், அதே போன்று, மற்றவர்களால் கேட்க முடியாத தொலைவிலிருந்து வரும் சிறுசப்தத்தையும் நாயகம் ﷺ அவர்கள் மிக தெளிவாக கேட்பார்கள் ! 11. அருமை நாயகம் ﷺ அவர்கள் நடக்கும்போது வெயில் அவர்கள் மீது விழாத வண்ணம் மேகம் குடைபிடிக்கும் ! 12. கண்மணி நாயகம் ﷺ அவர்கள் மரத்தின் கீழ் அமரும் போது அம்மரம் தானாகவே வளைந்து அண்ணலுக்காக பணிந்து நிற்கும் ! 13. அருமை நாயகம் ﷺ அவர்களின் பரிசுத்த உமிழ்நீர் இனிமைதன்மையுடையதாகும். தங்களின் வாய் உமிழ்நீர்ப்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக மாறிவிடும் ! 14. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இறந்த சிறுவர் இருவரை உயிர்த்தெழ செய்தார்கள்! நூற்றுக்கணக்கான தம் தோழர்களின் நோய்களை சுகப்படுத்தினார்கள் ! 15. ரசூல் நாயகம் ﷺ ஏக இறையை பிரார்த்தித்து தங்கள் ஆட்காட்டி விரலால் சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினார்கள். அஸ்தமித்த சூரியனை மீண்டெழ செய்தார்கள். 16. முத்திரை நபி நாயகம் ﷺ அவர்களை நோக்கி கற்களும், மரங்களும் நடந்து வந்தன - அவர்களுக்கு ஸலாம் கூறின. மேலும் நாயகம் ﷺ அவர்களின் கட்டளைக்கு அவை கீழ்ப்படிந்தன. 17. ரசூல் நாயகம் ﷺ அவர்களின் திருவிரலிலிருந்து வெளியான அற்புத நீரை அருந்தி ஸஹாபாக்கள் தங்கள் தாகத்தை தீர்த்தனர். மேலும் அந்த புனித நீரிலிருந்து ஒழுவும் செய்தனர். 18. உஹது மலை கண்மணி நாயகம் ﷺ அவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தது. நாயகம் ﷺ அவர்களுடன் மலை பேசியது. கண்மணி நாயகம் ﷺ கூறினார்கள்: நான் விரும்பினால் தங்க மலைகள் நிச்சயம் என்னிடம் விரைந்து வந்துவிடும். 19. பூமான் நபி ﷺ அவர்கள் மீது பொய்யை இட்டுகட்டியவனின் இறந்த உடலை பூமியும் ஏற்க மறுத்தது. புதைத்த உடலை வெளியே வீசியது. 20. அண்ணல் நபி ﷺ அவர்களின் திருக்கரம் பட்ட பொருட்கள் புனிதமாகிவிடும். பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் தொட்ட புனித பொருட்களை தீயில் போட்டால் அப்பொருட்களை தீ தொடுவதில்லை - நெருப்பு எரிப்பதில்லை !
@@user-qw1bh3mc5j *#மாநபி** ﷺ அவர்களின் **#மறைவான_ஞானம்* ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: பதுறு யுத்தம் முதல் நாள் அன்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எங்களிடையே, எதிரிகளில் யார் யார் எந்தெந்த இடங்களில் கொல்லப்படுவார் என்பதை மிக துல்லியமாக நிலத்தில் கோடுபோட்டு காண்பித்து கூறினார்கள். மறுநாள் யுத்தத்தில், எதிரிகள் அந்த அந்த இடங்களில் ரசூல் ﷺ கூறியவாறே மாண்டு போயினர். அல்லாஹ்வின் மீது ஆணையாக, ரசூல் ﷺ கோடிட்டுக் காட்டிய இடங்களிலிருந்து ஒரு சிறு அளவு கூட கொல்லப்பட்ட எதிரிகளின் இடங்கள் மாறவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1779, அபுதாவூது 2681)
@@user-qw1bh3mc5j *நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மறைவான ஞானம்* *புயல் எச்சரிக்கை* அபூ ஹுமைது ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்: தபூக் போரின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுடன் ' *குரா* ' என்ற பள்ளத்தாக்கில் சென்றடைந்ததும் இன்றிரவு படுவேகத்துடன் புயல் ஒன்று வீசும். எனவே அந்நேரம் யாரும் நிற்க வேண்டாம். ஒட்டகம் வைத்திருப்பவர்கள் அதை கயிற்றால் கட்டிப்போடவும். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அன்றைய இரவில் கடும் புயல் வீசியது. ஒருவர் நின்று விட்டார் புயல் அவரைத் தூக்கிச் சென்று *தய்யீ*என்ற மலையில் போட்டுவிட்டது. (முஸ்லிம் :5948) சூறாவளிக் காற்று வீசும்போது நபிகள் நாயகம் ﷺஅவர்கள், "இறைவா! இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக்காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்" என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம், 1640. *ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்*
@@jamalmohamed5980 இந்த ஹதீஸ் சரியே இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை ஏன் என்றால் அல்லாஹ் நபியவர்களுக்கு வஹி அறிவித்தது ஆனால் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்வைத்தவிர யாரும் மறைவானவற்றை அறிய முடியாது
அல்ஹம்துலில்லாஹ்.. எனக்கும் என் கணவருக்கும் இந்த பாக்கியம் கிடைத்தது..எங்களுக்கும் என் குழந்தைகளுக்கும் உலக முஸ்லிம்கள் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும்.❤❤❤🤲🤲🤲🤲.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ். உங்களுக்கு அல்லாஹ் இந்த அழகிய வாய்ப்பை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அதேபோல் எங்களுக்கும் இந்த வாய்ப்பைத்தர இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும்.
Aameen. Ameen. Ya Rabbil Alameen. May Allah SWT make your wishes come true. Aameen. It made us cry when our beloved prophet SAW was stoned to bleed😰😰😰😰
வெக்கமாக இருக்கிறது நானும் இந்த உம்மத்தில் இருக்கிறேன். என்ன அமல், என்ன வரலாறு தெரிகிறது என்று உங்கள் பேச்சில் 💔உடைந்து விட்டேன் சகோதரி அல்லாஹ் உங்கள் அமல்களை கபூல் செய்வானாக 🤲🏻