படகுகள் தயாரிப்பின் தலைசிறந்த தமிழன் தேவகுமார்
இலங்கையில் மீன்பிடிக்குச் சிறந்த தளங்களைக் கொண்டது வடபகுதிக் கடற்பரப்பே. மணற்பகுதி, பாறைகள், கடல் நீரேரிகள், பொங்கு முகங்கள், சதுப்பு நிலங்கள், கண்ட மேடைகளை உடைய பல்லுருவக் கடற்பரப்பாக இவை திகழ்கின்றன. வட கீழ் பருவக் காற்று தரும் சிறந்த நீரோட்டம் மீன்பிடிக்கு மேலும் சாதகமாகும். இலங்கையின் சுதந்திரத்துக்கு முன் வீச்சுவலை, கட்டுவலை, கரைவலை மீன்பிடிகளால் படகுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. 1981 முதல் 2009 வரை போர்ச் சூழலால் மீனவர்களது இடப்பெயர்வு, பாதுகாப்புச்சட்டங்கள் மீன்பிடித்தொழிலைப் பாதித்தன. மீனவ சங்கங்கள் உருவாக்கத்தின் பின்னர் மீன்பிடித்தொழில் விருத்திபெற்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவகுமாரது நியூ அஜஸ்மின் இன்டஸ்ரியல் படகுகள் தயாரிப்பில் இன்று பிரகாசித்து வருகிறது. தரமான படகுகள் தயாரிப்பில் வடபகுதி மீனவ சங்கங்களது நல்வரவேற்பைப் பெற்றுள்ளது. படகுகள் தேவையுடைய மீனவ உறவுகள் தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பிலக்கம் -
திரு தேவகுமார் 094773825923
Presented By - Virushan Sivanantham
Script By - Thujeeskanth Pushparajah
Special Thanks To - Kopi & Praveen (Yarlin Yathirikal)
#jaffna
#படகு
#BoatManufacturing
29 окт 2021