கவியரசரின் பெருமைகளை மிக மிக தெளிவாக, அருமையாக எடுத்துரைத்துள்ள அன்புச் சகோதரியை எனது உளமார பாராட்டி வாழ்த்துகிறேன்... எவ்வளவு பாராட்டினாலும் தகும்... 🙏🙏🙏🌹🌹🌹
நன்கு ஆராய்ந்துள்ளீர்கள் கண்ணதாசன் பாடல்களை. அவரே உங்கள் உரையை கேட்டு அசந்து போவார். நம் பாடல்களுக்கு இப்படியெல்லாம் வியாக்கியானம் உண்டா என்று. அருமை சகோதரி.
அருமையான பதிவு. திருமதி.வாசுகி அவர்கள் சொற் பொழிவு நான் கேட்டதில்லை.அருமையான தமிழில் பேசினார். கண்ணதாசனை தத்ரூபமாக நம் முன் கொண்டு வந்தார்.இவருடைய சொற்ப் பொழிவை இனி அவசியம் கேட்க ஆர்வமாக உள்ளேன்.நன்றி.
3 года назад
அருமை. சரஸ்வதி ஆண் ரூபமெடுத்து வந்த அவதார கவிஞன் நமது கவியரசர் மட்டுமே. ஏனோ அந்தகன் என்பாதாலோதானோ, சிறந்த கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான்
Dearest Sister , உங்களது பேச்சை நான் இன்று தான் முதல் முதலாக கேட்கிறேன். பாரதி பாஸ்கரின் பேச்சை வாடிக்கையாக கேட்பவன் நான்.தங்களது இந்த பேச்சை கேட்டால் அவரெ தங்களை போற்றி பாராட்டுவார்கள். அவ்வளவு அழகான பேச்சு. நான் ஒரு மலையாளி. இவ்வளவு நன்றாக நான் தமிழ் எழுதுவதற்கு காரணம் , என் மானஸிக குருவான திரு. கண்ணதாசன் அவர்கள் தான். அவர் பாடல்களை நான் உயிராக மதிக்கிறேன். தங்களது இந்த பேச்சை கேட்க அவர் இல்லையே என்று நினைக்கும்பொழுது ரொம்ப சங்கடமாக இருக்கிறது. அறிவை அள்ளியள்ளி கொடுத்த ஆண்டவன் அவருக்கு ஆயுளை கொடுக்கவில்லையெ. கஷ்டம் ! ___________ பணிவன்புடன், 🙏💓🙏 KottayamBabu, Babus Publications S.H.Mount. Kottyam, Kerala 25-5-2021
நன்றி கோட்டயம் பாபு . தமிழர்களே தமிழை வெறுத்து ஆங்கில மோகத்தில் இருக்கும் போது கேரளத்து நாயகன் தமிழில் எழுதி அசத்து விட்டீர்கள் . தமிழன்னையின் தங்கை தானே மலையாளம் . பாராட்டுக்கள்
பாட்டு பேச்சு எல்லாமே மிக அருமை. கவியரசு கண்ணதாசனை ப்பழி வாங்கவே வைரமுத்துக்கு கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டிய கலை ஞரின் குள்ளநரித் தனத்தை ஊர் அறியும்.
அம்மா உங்களை வாழ்த்தி வணங்கி தமிழ் கொண்டு தமிழால் பாராட்டுகிறோம் இதை கேட்ட இன்று பாராதியார் நினைவுதினம் கவியரசு கண்ணதாசன் மறைவு அன்று சென்னை நடிகர் சங்கத்தில் 2 நாட்கள் இருந்து இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டேன்.....
கவிஞர் கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் என்றும் மறவாது மனதில் நிலைத்து நிற்பவை.அப்படியான பாடல்களை இனிய தமிழ் இலக்கிய வடிவில் எடுத்துரைத்தது மிக மிக அருமை.
" படை திறந்த வெள்ளம் " அல்ல சகோதரா ! " மடை திறந்த வெள்ளம் " என எழுத வேண்டும் . தமிழ் தட்டெழுத்தில் " ப " அருகில் " ம" இருப்பதால் தவறாக பதிவாகியுள்ளது என நினைக்கிறேன் .
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே.அவர் ஒருமுறை குற்றாலத்தில் சில நாட்கள் தங்கி இருந்த போது நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.என் வாழ்நாளில் அவரை சந்தித்ததை நான் பெற்ற மிகப்பெரும் பேறாக கருதுகிறேன்.
கவியரசர் கண்ணதாசன் நம்மாழ்வார் பாடல் பிடித்தேன் உணர்ந்தேன் உய்ந்தேன் என்ற பாடலில் இருந்து பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் பாடல் வரிகள் கையாளப்பட்டது.நடராஜப்பத்து மானாட மயிலாட மங்கைசிவகாமியாட பாடல் வரிகளில் இருந்து தில்லானா மோகனாம்பாள் பாடல் மானாட மயிலாட மங்கை இவள்கைகளாட பாடல் நலந்தானா பாடலின் இறுதி வரிகள் பாரதியாரின் பாடல் கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்.அத்திக்காய் காய் பாடல் தெலுங்கு பாடலின் இரண்டு வரிகளை எடுத்து விரிவுபடுத்தியது.நிலையாமை பாடல்கள் பட்டினத்தார் மற்றும் சித்தர் பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டது.இப்படி கம்பராமாயணம் தோள் கண்டார் தோளே கண்டார் தோளில் இரண்டு கிளிகள் கண்டேன் இப்படி தமிழிலக்கியப் பாடல்களை எளிமையாக்கி அழகான திரைப்பாடல்களாக தந்த பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களைச் சாரும்.
அருமை அருமை.... நல்ல குரல் வளம்... சிறப்பான பேச்சு....இதை கேட்ட பிறகும் சில அன்பர்களுக்கு அவர்களின் கருத்தை ஆங்கிலத்தில் கூற எப்படி மனம் விழைந்ததோ? நான் இவரின் மிகப் பெரிய ரசிகையாகி விட்டேன்... தொடரட்டும் உங்கள் பணி 👍
அம்மா உங்கள் பேச்சில் தமிழ் வாழ்கிறது உங்கள் மூச்சிலே இசைவிளையாடுகிறது பாட்டும் நானே பாவமும் என்று சொன்ன இசை தமிழே உங்கள் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் அன்பு டன் பாபுசிங் கோவை போத்தனூர்
சகோதரி தாங்களின் தன்னலமற்ற இலக்கிய இலக்கணம் நிறைந்த அழகிய தமிழ் உறையாடல் வருங்கால சந்ததியினர் தாங்களின் ரோல்ஸ் மாடலாக மனதில் கொண்டு செயல்பட சொல்வேன் தாங்களின் தன்னலமற்ற சேவையை தொடர்ந்து செய்யுங்கள் இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு god blus
கலையுலகம் கண்டெடுத்த வள்ளுவன் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இலக்கியம்-ஆன்மீக உலகம் கண்டெடுத்த வாழும் பெண் வாரியார் வாசுகி-திறனாய்வு-திகைப்பு-பாடல்களும் விரிவுரையும் என்றும் மணக்கும் சஞ்சீவிகள்-நின்று வாழும் சிரஞ்சீவிகள்!
கல்வி சிறப்பு மனிதன் சிந்தனை சிந்திப்போம் தமிழ் வாழ்க எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்