நீங்கள் உரைத்திட்ட தமிழ் போல் நீடூழி வாழ்க. இந்து மதத்திற்கு நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு வாழ்க. உங்கள் நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக வேண்டும். வாழ்க வளமுடன். வளர்க பொலிவுடன்.
அருமை..அடே ஜாம்பகா என்று சொல்லும்போது என்ன ஒரு கம்பீரம். எவ்வளவு அழகாக இவ்வளவு பெரிய பாடலை பிழைகள் இல்லாமல் தடுமாறாமல் சொன்னார். என்ன ஒரு திறமை. இது வரை எங்களுக்கு இது தெரியாது.தெரிவித்தவற்க்கு மிக நன்றி
அருமை சகோதரா இதுபோன்ற இறைவன் பாடல்கள் தெரிந்த பாடும் அனைவரும் உண்மையிலேயே நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்...இவர்களை எல்லாம் நாம் பாராட்டி பரிசிளிக்கவேண்டும் 🙏
இந்த தர்மம் தெரியாமல் நம் மதத்திலிருந்து மதம் மாறி நம் கடவுளயே தப்பாக பேசித் திரிகிறார்கள் நீங்கள் புண்ணியவான்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணை தாருங்கள் உங்களுக்கு எங்களால் முடிந்த உதவியை இந்த ஹிந்து தர்மத்தின் சார்பாக செய்ய தயாராக இருக்கின்றோம் உங்கள் என்றும் நாங்கள்
அருமை தம்பி. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு அற்புதமான பாடலை கொஞ்சம் கூட தடுமாற்றம் இன்றி சொல்லி இருக்கிறீர்கள். அதிலும் அடே வீர ஜாம்பகா என்று சொல்வது அருமை. வாழ்த்துக்கள்.
மனிதருடைய இறப்பிற்கு பிறகு அவருக்கு அந்திம கடன் செய்யும் உறவுகள் நன்பர்கள் இறந்தவருக்காக செய்யும் பொருள் உபகாரம் இறந்தவர், இறைவன் திருவடி சேர உதவும் என விளக்கிய அருமையான வசன பாடல். மனிதர்களின் பாவ புண்ணிய காரியங்கள் என்னென்ன என விளக்கிய அருமையான பாடல் வரிகள். மனிதன் இறந்த பிறகு சொல்லப்படும் மயான பாடலை பாடிய தம்பிக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
அருமை அருமை என்னதான் திராவிடமாடலென்று உதார்விட்டாலும் வரலாறும்,பழமையும் பண்பாடும் இதுபோன்றவர்கள் இருக்கும்வரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை வாழ்கவளமுடன் நன்றி
வாழ்க்கைக்கு தேவையானது. அருமையான காணொளி செய்தி. வாழ்க்கை பாடமும் அர்த்தமும் புதைகுழி அடக்கம் செய்கிற நேரத்தில் நன்றாக விளக்கி சொன்ன நண்பர். நன்றி நண்பா 🙏
சூப்பர் அண்ணா மெய்சிலிர்த்துப் போனது கேட்க கேட்க கேட்க கேட்க அருமையா இருக்கு இதை எப்போது செய்வார்கள் இறுதிச் சடங்கும் போது சுடுகாட்டில் வழியிலேயே எங்கு செய்வார்கள் செய்வார்கள் அண்ணா
அருமை அருமை அருமை நான் எங்கள் பகுதியில் ஒரு பெரியவர் பெயர் நாராயணன் அவர் பாடி கேட்டது போலவே இருந்தது இந்த சகோதரர் பாடிய ஒரு மனிதனின் வாழ்நாளின் இறுதி பாடல் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன்
"வாழ்க்கையின் தத்துவம் " புண்ணியங்கள் என்னென்ன, பாவங்கள் என்னென்ன என அருமையாக விளக்கியுள்ளீர். இன்றைய நவீன உலகில், மக்களுக்கு இதைப்பற்றிக்கூறித் தெளிவுபடுத்திய ""ஆசானுக்கு" எனது மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு இது போன்ற சொல் திறன் கேட்கும் போது மன அமைதி நல்ல எண்ணம் நல்ல குணம் நம்மிடம் இருக்கும் என்று நம்புகிறேன் இவ்வரிகளை சொன்ன நபருக்கு மனமார்ந்த நன்றி
அழகான வரிகள் பிழையில்லாம பாடியது அருமை இவ்வளவு ஆண்டுகளானாலும்கூட அழியாத இந்த அரிச்சந்திர கட்டளை தமிிகத்திலே இன்றும்கூட கடைபிடிக்கப்பட்டு வருகின்றன ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும்கூட இன்றும்ஓங்கி ஒளிக்கும் வீர ஜாம்பகவான் பாடல் மனிதனின் இறுதியாத்திரை பாடல் ஆஹா என்னா அருமை தங்கமே நீ பல்லாண்டுகள் வாழ வேண்டும் நன்றிங்க நீங்க நீடூழி வாழ்வீர்
நான் இதை பார்த்ததே இல்லை அண்ணா நீங்கள் மிகவும் அழகான தமிழில் அருமையாக பாடினீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல் ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைய இறைவனை வேண்டுகிறேன்
திகட்டாத ஒரு பாடல்! பாடல் முடியும் வரை உலகம் நின்று விட்டது சிந்தனை ஒரு நிலைப்பட்டது!! மனிதனின் வாழ்க்கை முறையை புரியும்படி எளிமையாக உள்ளது இப்பாடல். வாழ்க நீ எம்மான்.
மிக சிறந்த பாடல் வரிகள் உங்கள் ஞாபகசக்தி வியப்பளிக்கிறது இந்த அறிய உங்களோடு மறைந்து விடாமல் அனைவருக்கும் பரப்பவும் உங்கள் தொழில் மீது மிகுந்த மரியாதை மிக்கது.
@@PAADALAM_VANGA_MEDIA இந்த பாடல் உங்களுக்கு எப்படி கிடைத்தது இது எந்த நூலில் உள்ளது அல்லது செவிவழி பாடலா இதனை தமிழகம் முழுவதும் உள்ள உங்கள் தோழர்களுக்கு பரப்பவும். உங்கள் தொழில் மற்றும் சேவையும் எத்தகைய புனிதமானது என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் இருப்பிட விவரத்தையும் போன் நம்பரை பதிவிடவும்
அண்ணா நீங்கள் நலமுடன் வாழ்க என்று கூறி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் .நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொண்டு மிகவும் அருமை.மென் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் என்று கூறி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.
உன்மையில் நீங்கள் சொல்வது உன்மை இந்த காரியம் செய்யும் உங்களுக்கு புன்னியம் வந்து சேரும் ஒருவர் பிறக்கும்போது கொண்டாடுவது பெரிய காரியம் அல்ல அவனது இறுதி காலத்தில் செய்யும் காரியம் மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவர் நீங்கள் தான் நீங்களே இவ்வுலகில் மிகவும் உயர்ந்தவர் இதை அறியாமல் இருப்பவர்கள் வாயில் மண்ணு
ஆகா ஜாம்பவா இந்த புண்ணியமான பூலோக வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவு வரை மிக கோர்வையாக தங்கள் முன்னோர் சொல்லிக்கொடுத்த வண்ணம் இந்த பூ லோக அடியவர்களுக்கு உறைக்கும் வண்ணம் செப்பிய தங்கள் பாதம் பணிகிறேன்.மிக்க நன்றி.இதை இந்த அடியேன் 70 வயது வறை கேட்டதில். இந்த மிக முக்கிய நேரத்தில் அதன் மிக ஆழ்ந்த அர்த்தத்தில் தங்களை ஆழப்படுத்திக்கொள்ளாமல் சிலர் *"ம்*" சீக்கிரம் எனச்சொல்வதுதான் வருத்தமளிக்கிறது.
பங்காளி சூப்பர் நான் எங்க பகுதியில் சங்க தலைவராக இருந்தேன் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இரப்பிற்கும் இடுகாடு மற்றும் சுடுகாடு சென்று இருக்கிறேன் இது பாடல் எங்க பகுதியில் என் பெயர் கொண்ட தம்பி நாகராஜன் என்பவர் பாட கேட்டு இருக்கிறேன் ஆனால் தங்கள் பாடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் நன்றி