How kavignar pulamai pitthan won the heart of Actor MGR by his first song | முதல் பாட்டில் எம்.ஜி.ஆர் மனதை வென்ற புலமைப்பித்தன் #pulamaipithan #mgr #msv #kannadasan #kshankardirector
திரு துரை சரவணனுக்கு இந்த ஒரு சிறப்பான பதிவைக் கொடுத்ததற்கு நன்றி. வாழ்க்கையில் மறக்க முடியாத மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். அதனுள் இத்தனை வரலாறுகளா என்ற வியப்பு!. " அடிப்பார் வலியார், துடிப்பார் மெலியார், தடுப்பார் யார் யாரோ என்ற வரியின் முடிவில் நான் இருக்கிறேன் என்பது போன்ற நாயகன் உருவில் எம்ஜிஆரின் அன்று தோன்றிய முகம் இன்று வரை எங்கள் மனதில் நீக்கமற நிறைந்துள்ளது.
*பித்தனுக்குப் பாட்டெழுதிய பித்தன்* *என்ற புகழுக்குரியவர்* **புலவர் புலமைப்பித்தன்** *(கரிகாலன்)* திரைப்படப் பாடலாசியர்களுள் புலவராக தன்னை அடையாளம் காட்டி, தமிழ்ப் புலமையுடன் தரமானப் பாடல்களை, தாராளமாக எழுதிக் குவித்தவர், *புலவர் புலமைப்பித்தன்* ஆவார். இன்று *செப்டம்பர் திங்கள் 8* ஆம் நாள் அவரது நினைவு தினமாகும். சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால், தனது *85* வயதில், கடந்த 2021 ஆம் ஆண்டில் அவர் காலமாகி விட்டார். *பித்தனுக்கு பாட்டெழுதிய பித்தன்* என்று, திரையுலகினரால் இன்றும் பேசப்படும் புலமைப்பித்தன், எண்ணற்ற பலப் பாடல்களை, தமிழ் ரசிகர்களுக்கு வார்த்திட்ட, கவிக் களஞ்சியமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலமைப்பித்தன் கோவை மாவட்டத்திலுள்ள பள்ளப்பாளையம் என்ற கிராமத்தில், *கருப்பண்ணன் -தெய்வானை அம்மாள்* வாழ்விணையருக்கு மகனாக, *1935 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6* ஆம் நாளில் பிறந்தவர். அவரது இயற்பெயர் ராமசாமி என்பதாகும். சிறு வயதிலேயே கல்வியில் நாட்டம் மிகுந்தவராக விளங்கினார். அதிலும் தமிழ்ப் பாடத்தில் அவரின் ஆற்றல் திறம்பட மேலிட்டிருந்தது. ஒருமுறை பள்ளி நேரத்தின் போது, இந்திப் பாட ஆசிரியர் ஒருவர் அவரை, *“இவன் ஒரு பைத்தியக்காரன்”* என்று திட்டியிருக்கிறார், அதனைக் கேட்டு உடனடியாக அவர், *“ஆம், நான் தமிழ்ப் புலமையில் பித்துக் கொண்ட பைத்தியக்காரன்”* என்று பதிலளித்து, அன்றே *புலமைப்பித்தன்* என்று, தனக்குத் தானே புனைப் பெயர் சூட்டிக் கொண்டார். கோவை சூலூர் பகுதியில், ஒரு நூற்பாலையில் பணி புரிந்து கொண்டே, தமிழ்ப் புலவருக்கான கல்வியை முடித்தார். பின்னர், 1964 ஆம் ஆண்டு, சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் அவர் தமிழாசிரியராக வேலைக்கு அமர்ந்து, பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் சிலரது தயவால், பிரபல இயக்குநர் கே.சங்கரின் அறிமுகம் கிட்டியது. அப்போது மக்கள் திலகம் எம்ஜிஆரின் இரட்டை வேட நடிப்பில், பரபரப்பாக உருவாகிக் கொண்டிருந்த, *'குடியிருந்த கோயில்'* படத்தை இயக்கும் பணியில் சங்கர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அந்நிலையில், சென்னை தியாகராய நகர் வீதியில் புலமைப்பித்தனை எதேச்சையாக சந்தித்த சங்கர், அப்படத்திற்காக ஒரு பாடலை எழுதித் தருமாறும், பித்தன் ஒருவன் தன்னைத் தானே பிதற்றிக் கொண்டு, பாடுவது போலவும், அப்பாடலிலே, வாழ்விலே பொதுவில் நடக்கும் விஷயங்களை பொருள்படும் வண்ணம் பதமான வரிகள் பொதிந்திருக்க வேண்டுமெனவும், கோரிக்கை விடுத்து விட்டு சங்கர் அங்கிருந்த அகல, புலமைப்பித்தனும் அங்கிருந்த வீதியின் ஓரத்திலேயே நின்று கொண்டு, பாடலை எழுதுகிறார். பல்லவியை கேள்விக் கணையோடு தொடுக்கிறார். தொடக்கத்திலேயே அதன் விஷயம் வினாவுடன் எழும்புகிறது. *"நான் யார்? நான் யார்? நீ யார்?* *நாலும் தெரிந்தவர் யார்?- யார்?"* படப்பிடிப்பு தளத்தின் அறையில் எழுத வேண்டியப் பாடல். பட்டப் பகலில் பலரும் உலாவுகின்ற வீதியில், புதுப் பானையில் பொங்குகின்ற பாலைப் போன்று, புதியப் புலவன் புலமைப்பித்தனுக்கு *"பா"* பொங்குகிறது. பாடலை மறுநாளே சங்கரிடம் சென்று ஒப்படைக்கிறார். சங்கர் திருப்தியடைகிறார். இது யாரும் அறியாமல் இரகசியமாகவே நடக்கிறது. சங்கரின் பரிந்துரையின் பேரில், மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் சம்மதம் பெறப்பட்டு, சாரதா படப்பிடிப்பு நிலையத்தில் அப்பாடலை *டி.எம்.எஸ்* பாட, மெல்லிசை மன்னர் *எம்.எஸ்.விஸ்வநாதன்* இசையில் பதிவாகிறது. *'குடியிருந்த கோயில்'* படத்தில், அப்பாடலுக்கு தனி மவுசு ஏற்படுகிறது. அப்படத்தில் பித்தனாகத் தோன்றும் எம்ஜிஆருக்கு இந்தக் கவிப் பித்தனின், *"நான் யார் நீ யார்"* என்ற அந்தப் பாட்டு ஒலிக்கிறது. பிறகுதான் அது புலமைப்பித்தனின் கவிப் புனையல் என்று பரவுகிறது. தொடர்ந்து, *டி.எம்.எஸ்-ஏ.எல்.ராகவன்* இருவரதுக் கூட்டு தயாரிப்பில் உருவான, *'கல்லும் கனியாகும்'* (1968) படத்திற்காக புலமைப்பித்தன், *"எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே"* என்றப் பாடலை எழுதுகிறார். பாடல் *டி.எம்.எஸ்* பாட, அமோக வரவேற்பைப் பெறுகிறது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் சொந்தப் படைப்பான, *'அடிமைப்பெண்'*(1969) படத்திற்கு, புலமைப்பித்தனின் *"ஆயிரம் நிலவே வா"* என்றப் பாடல், பெரும் புகழினை ஈர்த்தப் பாடலாகும். எம்.ஜி.ஆர் தனதுப் படங்களில் புலமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்து, *"இவரைப் போன்ற தமிழறிஞர்கள் பலர் சினிமாவிற்கு வர வேண்டும்*" என்ற வேண்டுகோளை முன் வைத்ததை, மறந்து விட முடியாது. இதனைத் தொடர்ந்து புலமைப்பித்தனின் திரைப்படப் பாடல் படலம் விசாலமடைந்து, பலப் படங்களுக்கு பாட்டெழுத அவருக்கு அழைப்பு கிட்டியது. மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில், 1982 இல் அவர் *"அரசவைக் கவிஞராக"* நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் அவர் சிறிது காலம் பணியாற்றினார். புலமைப்பித்தனின் மனைவி பெயர் தமிழரசி. அத்தம்பதியருக்கு *புகழேந்தி* என்ற மகனும், *கண்ணகி* என்ற மகளும் உண்டு. *“இலக்கிய நயத்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்த, புலவனென்றப் பெருமை எனக்குண்டு”* எனத் தமிழ் செருக்கோடு கூறியவர் புலமைப்பித்தன் ஆவார். அவர் புனைந்திருக்கும் சிலப் பாடல்கள் பின் வருமாறு:-
Ennaga Antha kalathil Varumai all side OK varumai all family vasathi ellamal than erukarkal evar Tech sehool la eruthadu vasathi erukum Napar Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Kangaras
வணக்கம் ஐயா, தாங்கள் விமர்சனம் செய்யும் தங்களுக்கே உரித்தான விதத்தில் மிகவும் அருமையாக உள்ளது. அதே வேளையில், சில விஷயங்களை தாங்கள் கயிறு திரித்திக் கூறுவது வருத்தமாக உள்ளது. புலமைப்பித்தன் இந்தப் பாடலை விஸ்வநாதன் முன்னிலையில் எழுதவில்லை. இயக்குநர் சங்கர் பாடலுக்கான காட்சியை அவரிடம் விவரிக்கவே, அதற்கேற்றவாறு தனது கற்பனை திறனால் அவர் எழுதிக் கொடுத்ததை, சங்கரே விஸ்வநாதனிடம் கொடுத்த பின்னர்தான் அப்பாடலுக்கு மெட்டமைக்கப்பட்டது. பின்னர்தான் புலமைப்பித்தன் நேரிடையாக வரவழைக்கப்பட்டதாக முன்பே ஒரு இதழில் படித்திருக்கிறேன். தாங்கள் கூறுவது முற்றிலும் வேறுபாடாக உள்ளது. நன்றி ஐயா.
pulamai pithan 1st song is not in குடியிருந்த கோயில் , அந்த பாட்டும் கிடையாது, சும்மா கதை அடிக்க வேண்டாம், அடிமை பெண் படத்தில் வரும் 1000 நிலவே வா தான் புலமை பித்தனின் 1st பாட்டு, SPB கும் அதுதான் 1st பாட்டு,, மேலும் குடியிருந்த கோயில் directed by p நீலகண்டன்,, அளவா புருடா விடு ,,
முதல் பாடல் குடியிருந்த கோயில் படத்தில் நான் யார் தான்! இயக்கியது கே.சங்கர்தான்...1968 ல் குடியிருந்த கோயில்,1969 ல் அடிமைப்பெண் ! இரண்டு படங்களின் இயக்குனருமே கே.சங்கர்தான் ! ஆக,துரை சீனிவாசன் புருடா விடவில்லை...கோவிந்த் நீர்தான் புருடா விடுகிறீர் !