மிக நீண்ட காலமாக ஐயா அவர்கள் பாடிய வேல் விருத்தம்,மயில் விருத்தம்,கந்தர் அலங்காரம் கேட்டு...திரும்பத் திரும்பக் கேட்டு..அதே போல் சொல் பிரித்து,பிழையின்றி பாடும் வரம் பெற்றேன் ஐயா.பொருள் கூட எல்லாப் பாடல்களுக்கும் கூறும் அளவு படித்துள்ளேன்..கந்தர் அலங்காரம் மட்டும் முழுப் பாடல்களும் ஐயாவின் குரலில் கேட்க முடியாது போனது தான் பெருங்குறை.ஆனால் ஓரிரண்டு தேவாரம்,திருப்புகழ் மட்டுமே சங்கீதம் மூலம் கற்றுக் கொண்டிருந்த நான் கந்தர் சஷ்டிக் கவசம் தவிர பெரிய பாடல்கள் எதுவுமே கற்றறியாது இருந்தேன்.நாங்கள் இலங்கை.யாழ்ப்பாணத்தில் இருந்து திருமணம் முடித்து கொழும்பு வந்த போது எனது கணவரின் உறவினர் ஒருவர் சின்ன ஐயா பாடிய கந்தர் அனுபூதி mp3, கொடுத்தார்.அதனைக் கேட்க கேட்க ..என்னவோ..அதில் முழுவதும் லயித்து..பாடல்,சொற்பிரிவு,பொருள் என முதன்முதலில் கற்றுக் கொண்டு..இன்று...கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேலான திருமுறைகள்,அருணகிரி சுவாமிகளின் பாடல்கள் என அதே முறையில் இசை,சொற்பிரிவு,பொருள் என்று கற்றுக் கொண்டுள்ளேன். பாடல்களோடு மட்டும் நில்லாது 18 ,புராணங்கள்,இதிகாசங்கள்..தல புராணங்கள்..என தேடித்தேடி கற்று ..இன்று ஒரு முழு ஆன்மீகவாதியாக அடியேன் உள்ளேன்.இதற்கு வித்திட்டவர் சின்னய்யா.. அவர் பாடிய அனுபூதி..இன்னமும் நிறையக் கற்க வேண்டும் என்ற வேட்கையையும் கொடுத்தது.நன்றி...மிக்க நன்றி..ஓம் நமச்சிவாயம்.
வடமராட்சி..வதிரி..உடுப்பிட்டி வீதியில் இரும்பு மதவடியில் எங்கள் வீடு..அதெல்லாம் விட்டு கொழும்பு டெஹிவளையில் தொழில் நிமித்தம் வாழ்கின்றோம்.. நமச்சிவாயம்.