உங்கள் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது தங்கச்சி.எனக்கு உங்களைப் போல விவசாயம் செய்து வாழ வேண்டும் என்று ஆசை. நான் தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறேன்.எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம். எனது பிள்ளைகளுக்கு தமிழ் நாட்டிற்கு ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு வந்து விவசாயம் எமது தமிழ் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் கற்றுக் கொடுக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம்.
கடலைப் பருவம் வரும் பொழுது கடலை பிடிப்பதற்கு அடுத்த முறை முதலிலேயே மருந்து அடித்துக் கொள் இன்னும் நிறைய கடலை அடுத்தவருடம் அறுவடை பண்ணலாம். பருப்பை முழுவதும் ஆட்டி வைத்தால் எண்ணெய் கெட்டுப் போகாதா நாள்கள் அதிகமான பிறகு. இப்பொழுதுதான் பார்த்தேன் கடலை உடைப்பதற்கு உள்ள மெஷினை.
நல்லது சிறப்பு மகிழ்ச்சி. அந்த பெரிய தூக்கு(பெரிய மூடி கொண்ட பாத்திரம், கேன்) நன்றாக உள்ளது. நான் இதுவரை அலுமினியம் கேன்தான் பார்த்திருக்கிறேன்.. எங்கே வாங்கினீர்கள்.
அன்பு திருமகள் அல்ல நீங்க அன்பு பூமகள் .. விவசாயத்தை வளத்தும் இளையசமுதாய இளம் பெண்மைக்கு அரசாங்கம் விருது தரவேண்டும்.. மிக துல்லிமான விளக்கங்கள்.. உங்கள் நம்பிக்கை நீங்கள் செய்யும் விவசாயத்தை விட பசுமையும் உண்மையும்.. வாழ்க தங்கை..
ஒரு 30or) 40 வருசத்துக்கு முன்பெல்லாம் கிராம பெண்கள் பக்கத்து கிராமத்துக்கு கடலை எடுக்க செல்வார்கள் கிட்டதட்ட ஒருமாசம் தங்கி கடலை ஒரு சாக்கு மூட்டை அளவுக்கு கடலை எடுத்து வருவார்கள் அதை வீடு முழுவதும் காய வைத்து மில்லுக்கு எடுத்து போய் ஆட்டி எண்ணெய் புண்ணாக்கு எடுத்து வருவார்கள் எங்கள் ஆயா அப்படி செய்வார்கள் அதெல்லம் பழைய காலம் அதுமாதிரி இப்பல்லாம் எங்க நாம் நிறைய விசயங்கள தொலைத்துவிட்டோம்
சகோதரி நாங்கள் எங்கள் காட்டில் இரண்டு வருடங்கள் கடலை போட்டம் எங்களுக்கு லாபமே இல்லை நஷ்டம் தான் ஏற்பட்டது ஆனாலும் எங்களுக்கு கடலை போடும் ஆசை குறைய வில்லை.
Thangachi na unga videos ellam papen... Romba super ah panarenga ma... Vazhthukkal... Enakku oru doubt da rendu kalayum metti poturukenga unkalukku mrg akiducha..
நீங்கள் செடி எடுக்கும் போதே நல்ல ஈரம் அதனால் மண் பிரியவில்லை.இழுத்தவுடன் செடியை உதறிவிட்டு போடவேண்டும் அதுவும் செய்யவில்லை எனவேதான் காய் உலர்த்த நாட்கள் ஆனது.காய் காயும் போதே மண் எல்லாம் கொட்டிவிடவேண்டும் அந்த அளவுக்கு உலர்ந்த பின் உடைப்போம்.உடைத்தபின் உலர்த்தும் வழக்கம் எங்கள் ஊரில் இல்லை.மில் செலவு எங்களுக்கு இல்லை.அவர்கள் தோல் எடுத்துக்கொள்வதால் தனியாக பணம் வாங்குவதில்லை மற்றபடி நீங்கள் எண்ணெய் அளவு சரிதான் 24 டூ 26 வரும்.நன்றி.
கடலைப்பருப்பு 70கிலோ சரி.... எத்தனை கிலோ கடலைக்கு 70கிலோ பருப்பு கிடைத்தது என்று சொல்லுங்கள்...3மூட்டை கடலை என்று சொன்னீர்கள்.. எத்தனை கிலோ என்று சொல்லவில்லை...