80 வயதாகும் இவர் வானம் பார்த்த பூமியில் நாட்டு வாகை, வேம்பு, தோதகத்தி, சிசு, தேக்கு, மகாகனி, மருதமரம் மற்றும் வேங்கை போன்ற மரங்களை நட்டு சுமார் 50 ஏக்கரில் ஒரு அற்புத வனத்தை உருவாக்கி, தினமும் இரண்டு முறை வலம் வருவதால் இன்றும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்கிறார்...
திரு சண்முகராஜ், குண்டம்பட்டி,
வம்பக்கோட்டை தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
முதல் கட்டமாக 14 ஏக்கர் நிலப்பரப்பில் 18×18 இடைவெளியில் மரங்களை நடவு செய்து, டிராக்டரில் தண்ணீர் கொடுத்து பராமரித்துள்ளார். இந்த மரங்கள் நன்றாக வளர்ந்ததை உணர்ந்த இவர் மேலும் படிப்படியாக 50 ஏக்கர் அளவிற்கு முழுமையாக மர விவசாயத்திற்கு மாற்றியுள்ளார்.
ஊடுபயிர்...
தற்சமயம் 8 ஆண்டுகளில், மரங்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மரங்களுக்கு இடையே மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு என தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஊடுபயிர் செய்துள்ளார்.இதில் ஐந்து ஆண்டுகள் நல்ல விளைச்சலை அறுவடை செய்துள்ளார்.
நிலத்தடி நீர் மட்டம்...
மரங்கள் நட்டதால் தற்சமயம் 20 அடியில் தண்ணீர்- நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறுகின்றார்.
மேலும் சென்ற ஆண்டு பருவ மழை இவர் ஊரில் மட்டும் அதிகம் பெய்ததாக கூறுகின்றார்.
மிளகுக்கொடி...
தற்சமயம் ஈஷா நடத்திய விவசாய பயிற்சிகளில் கலந்து கொண்டதன் விளைவாக, மரங்களில் மிளகு கொடியேற்றி தொடர் வருமானம் பெறும் முயற்சியில் உள்ளார். இந்த வருடமே ஒரு ஏக்கரில் மிளகு நாற்று நடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
பொருளாதாரம்...
20 ஆண்டுகளில் இந்த மரங்களின் மதிப்பானது 20 கோடிக்கு விற்க முடியும் என்கிறார். மேலும் விரிவான தகவல்கள் காணொளியில்...
#Rainfed #Vaagai #Neem #Teak #Sisu #Treebasedagriculture #CauveryCalling #Pepper #Isha
Click here to #Subscribe for latest RU-vid Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
9 сен 2024