இந்த மாபெரும் பாடலின் வரிகள் பாவேந்தரின் நன்முத்துக்களில் ஒன்று. மொழி ..இன..உணர்வுடன் பாடிய திரு.சீர்காழி என்றும் மறக்கமுடியாதவர். அந்த உணர்வு பொங்கும் வரிகள் வரும் திரை காட்சிகள் எம்.ஜி.ஆர் எதையோ தேடி அலைபாயும் காட்சிகள் (பாட்டு முழுவதும்) எங்கள் மொழி மற்றும் இனத்தில் செழுமை இருட்டடிப்பது போல் தோன்றியது எனக்கு மட்டும் தானோ...? இந்த காட்சிகளுக்கு வேறு ஏதாவது பாடலை வைத்திருக்கலாம் என தோன்றியது. கேரளத்தின் மாயையும்....கன்னடத்தின் கவர்ச்சிக்கு மத்தியில் என் புரட்சி நாவலரின் பாடல் குப்பைகளின் நடுவே கோமேதகம். (சினிமா ரசிகர்கள் கோபப்படவேண்டாம்.)
இந்தப் பாடல் தொகுப்பு அருமை. தொகுப்பாளர் தமிழிசை ரசிகர் நண்பரை மனமார வாழ்த்துகிறேன்; 16.01.2023 திங்கள் தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய இயக்கம் கவிஞர் முத்தமிழ் விரும்பி ****
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு காசைத் தேடி பூட்டுது ஆனால் காதோரம் நரைச்ச முடி கதை முடிவை காட்டுது ❤️ இந்த பிறவி ஒன்றே போதும்!!!! உன் பாடல் வரிகள் கேட்டு ஏழு பிறவியும் பெற்றேன் !!!! சுந்தரா!!!!!!!!!!!! ❤️❤️❤️❤️❤️❤️பட்டுகோட்டை ஒரு தமிழ் கோட்டை !!!!!!!❤️❤️❤️🌸🌸🌸🌸
சீர்காழி கோவிந்தராஜன் போன்ற அற்புதமான பாடகர்கள் எல்லோருமே இந்த மண்ணில் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர்கள். உலகம் உள்ளவரை இவர்களைப் போன்றவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
சீர்காழியின் கணீர்க் குரலில், வெண்கலக் குரல் இசையில் காலத்தால் அழியாத பாடல் வரிகள் ! குறிப்பாக பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள் 1950 1960 என்று காலநிலையைக் காட்டுகின்றன மறக்க முடியாத தமிழர் வாழ்வு., மயக்கமூட்டுகின்ற பாடல் வரிகள். தமிழ் திரை இசையில் பொற்கால இசையமைப்பு. கேட்போரை ஈர்க்கும் கருத்தாக்கம். வாழ்க தமிழ்த் திரை உலகம். இப்படிக்கு...... கவிஞர் முத்தமிழ் விரும்பி நெருஞ்சி இலக்கிய இயக்கம் தஞ்சாவூர். 16.01.2023 திருவள்ளுவர் தினம்.
60 & 70 காலம் ரசிகர்களுக்கு ஒரு அழகான இனிமையான பொற்காலம் T M S, சீர்காழி பி பி சீனிவாசன் சுசிலா M S விஸ்வநாதன் KVமகாதேவன் வேதா போன்றோர்கள் சிறந்த படைப்புகளை தந்து ரசிகர்களுக்கு தேனமுதம் தந்தார்கள்