ஏகாதசி, விரதம் எதுவாக இருப்பினும் இந்த இரண்டு பாசுரம் மறக்க வேண்டாம்
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்* நாரணா! என்னும் இத்தனைஅல்லால்*
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்* புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்* ஓவாதே நமோநாரணா! என்பன்*
வன்மைஆவது உன் கோயிலில்வாழும்* வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!* காரணா! கரியாய்! அடியேன் நான்*
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை* ஓவாதே நமோ நாரணா என்று*
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம* வேத நாள்மலர் கொண்டு உன பாதம்-
நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்* அன்று எனக்கு அவை பட்டினி நாளே.
22 сен 2023