தனித்த நிலையில் உயர்தினை பெயர் வரும்பொழுதும், உயிரெழுத்துக்கு முன்னும் 'ஓர்' என்று வரும். அதுவே ஓர் என்பது தனித்து வராமல் ஏதாவது தன்மை அல்லது பண்புச்சொல்லுடன் சேர்ந்து வரும்பொழுதும் ஓர் என்ற ஈற்று ஓசையுடன் வரும். அது தான் பாரதி பாடலில் 'நல்ல ஓரு வீணை' என்பதற்கு பதிலாக 'நல்ல' என்ற பண்புச்சொல்லுடன் சேர்ந்து ஒருமையை குறிக்க 'நல்லதோர் வீணை' என்று மருவது ஏற்ப்புடையது. இதே போலவே இலக்கியங்களிலும் ஒரு எனற ஒருமை வரவேண்டிய இடங்களில் ஏதாவது சொல்லுடன் ஒருமை குறிப்பிடும்போதுதான் வரு மொழி ஈறுடன் வருமொழி முதல் குரில் நெடிலாகி 1) அங்கு + ஒரு = ஆங்கோர், 2) மிகையான + ஒரு = மிக்கதோர், 3) சிறந்த + ஒரு = சிறந்ததோர் என்று வருவது காணமுடியும். இதில் வரும் பண்புச்சொல் முதலிலேயே திரிபு ஏற்பட்டிருப்பின் ஓர் எனறு வராது ஒரு என்றுதான் வரும். இதில் உள்ள சொல்லையே உதாரணமாக எடுப்போம். சிறந்த + ஒரு = சிறந்ததோர் என்றாகும். அதுவே, சிறப்பு + ஆன = சிறப்பான என்று மருவிய பிறகு மீண்டும் 'ஒரு' சேர்ந்தால், சிறப்பான + ஒரு = சிறப்பான ஒரு எனறுதான் வரும், உதாரணம்..... 'சிறம்பான ஒரு இலக்கியம்', 'மிகச்சிறப்புவாய்ந்த ஒரு மலர்', 'சிறப்பான ஒரு மலர்', சிறப்பான ஒரு திரைப்படம்' தவறாக ... சிறப்பானதோர் திரைப்படம் என்று வராது.
மேடம், உங்களின் தமிழ் இலக்கண கற்பித்தல் வகுப்பு மிகவும் அருமை; எளிமையாகவும் இருக்கிறது.கரும்பலகையில் எழுதுவதும் சரியாக இப்போது தெரிகிறது.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இப்படிக்கு, தமிழ்நாடு அரசுதுணை ச்செயலாளர் ( ஓய்வு)
@@AmizhthilIniyathadiPapa வணக்கம். இக்கால மாணவர்களுக்கு ஏற்றவாறு உங்கள் கற்பித்தல் முறைகள் அமைவதால் 1மதல்8ஆம் வகுப்புவரை உள்ள தமிழ்ப்பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கப்பட்ட இலக்கணப்குதிகளை தாங்கள் தெளிவுப்படுத்தினால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம். தாங்கள் இதுவரை வெளியிட்ட பதிவுகள் அனைத்தும் நிரந்தரமாக காட்சிப்படுத்தியே இருக்கச்செய்லதும் என்னைப்போல புதிதாக தங்கள் பதிவுகளை பார்ப்பவர்களுக்காக தாங்கள் இதுவரை வெளியிட்ட பதிவுகளின் பட்டியல் அளித்தாலும் மிக நன்று.
நனிசிறப்பு. பேச்சு வழக்கில் மட்டும் ஏற்போம். ஆனால் இலக்கண அல்லது மரபு மீறல் எழுத்து வழக்கில் இருந்திடல் முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும். நமக்கு மட்டுமன்று.நம் தலைமுறைக்கு இதுவே உயர்கடனாகும். தெளிவாய் விளக்கிய அம்மா அவர்கட்கு எம் வாழ்த்தும் நன்றியும்.
Beautiful explanation.பேச்சு வழக்கில் ஒருஊர்ல நிறைய கேள்விபட்டிருக்கோம்.some times rules are broken to make the good melody and also to capture the audience in drama.Folks and young writers by all means learn the rules of grammar, but do not hesitate to break or bend rules in the interest of creativity.!
அம்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம், அருமையான விளக்கம் 👌👌👌 எனக்கு நெடுநாட்களாக ஒரு சந்தேகம் அதை நீங்கள்தான் விளக்க வேண்டும் 🙏 பெரியப்பா பெரியம்மா எப்படி உச்சரிக்க வேண்டும்? பேரப்பா பேரம்மா என்று உச்சரிக்கலாமா? எ-கா பேருதவி, பேராண்மை, பேரிடர்.
விளக்கங்களுக்கு நன்றி. தற்காலத்தில், பண்ணி என்ற சொல், ஆங்கில சொற்களை (noun) தமிழ் வினைச் சொற்களாக்கும் முயற்சி போல் தோன்றுகிறது. உதாரணமாக: நான் காலையில், brushபண்ணி, bathபண்ணி, breakfastபண்ணி, dressபண்ணி வேலைக்கு போகிறேன். இது பற்றி உங்கள் கருத்தென்ன?