கர்ணனும் கண்ணனும் ஒன்று தான் காட்டாற்று வெள்ளம் போன்ற உங்கள் கருத்துகள் நன்று தான் கர்ணனும் வென்று தான் கண்ணனும் குணக்குன்று தான் ஒற்றுமைகள் சிறப்பு தான் இப்பணி உங்களின் அற்புத பொறுப்பு தான்... வாழ்த்துக்கள்
இதுநாள்வரை இந்த பாடலின் இந்த வரி வேற அர்த்தத்தை புரிந்து வைத்திருந்தேன் கண்ணனின் பிறப்பு கர்ணனின் பிறப்பை பொறுத்தி சொன்ன விளக்கம் சரியாக இருக்கிறது அருமை 👌
👌👍👏மனிதன் துன்பத்திலும் இறக்கும் தருவாயிலும் ஆறுதல் தேடும் மனித உளவியலை கண்ணதாசன் பாடல் மூலமாக சிறப்பாக விளக்கிய தங்களின் பதிவு வரவேற்கத்தக்கது. வாழ்க வளர்க உங்கள் தமிழ் தொண்டு.💐💐💐💐💐
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.. கவச குண்டலத்தை தானமாக பெற்றது அர்சுனனின் தந்தை இந்திரன்.. தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர்பழி ஏற்றாயடா இதற்கு அடுத்து நானும் உன் பழி கொண்டேனடா என்று தொடர்ச்சியாக சொல்லப்படுவதால் மேலே சொல்லப் பட்ட கருத்துகளையே அது குறிப்படும்.. என்னுடைய மற்ற பதிவு களையும் பார்த்து இதே போல் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.. நன்றி...🙏🙏
மிக அருமையாக சொன்னீர்கள் முருகன் அய்யா... நான் வேறு நீ வேறு இல்லை என்றும், கண்ணனும் கர்ணனும் இருவரும் கொண்ட கோலம் ஒன்றுதான் என்ற நிலையதை போர்க்களத்தில் பாடும் பாடலின் ஒரே வரியில் சொன்ன கவியரசு கண்ணதாசன் அவர்கள் சிந்தனையை மிகத் தெளிவாக எடுத்துச் சொன்ன முருகன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.....🙏
"தாய்க்கு நீ மகனில்லை," "தம்பிக்கு அண்ணனில்லை" ஊர் பழி ஏற்றாயடா கர்ணா"நானும் உன் பழி கொண்டேனடா " என்னுடைய அறிவுக்கு எட்டியவரை.... ஊரில் இருப்பவர்கள் அனைவரும் உன் மீது பழி சுமத்தினார்கள், உன்னுடைய பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் நீ கலங்காதே, என்று கடைசி கட்டத்தில் கண்ணன் கர்ணனுக்கு ஆறுதல் கூறுகிறான். மேலும், "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா" வஞ்சகன் கண்ணனடா" நீ மிக நல்லவன், வஞ்சகர் தனமாக கண்ணன் உன்னை வீழ்த்தி விட்டான் என்று கர்ணன் கூறுகிறார். நன்றி 🙏
வணக்கம் ஐயா.... "நானும் உன் பழி கொண்டேனடா..." நானும் என்கிற வார்த்தை யின் பொருள் தான் நான் விளக்கமாக கூறினேன்.. கவியரசர் பற்றிய என்னுடைய பதிவுகள் வெறும் விமர்சனங்கள் அல்ல.. நான் செய்வது திறனாய்வு.. கவியரசர் உலகின் தலை சிறந்த கவிஞர் அவரின் கவிதைகளை பாடல்களை திறனாய்வு செய்தால் மட்டுமே.. கவியரசரின் கவிதிறன் வெளிப்படும்.. அதை தான் நானும் செய்கிறேன் இலக்கியத்தில் நான் பெற்ற முதுகலை பட்டமும் இலக்கியத்தை உயிருக்குயிராக உணர்வு பூர்வமாக நேசித்து நான் படித்ததுவுமே இந்த திறனாய்விற்கு காரணம்.. தங்கள் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றி ஐயா.. விரைவில் தொலைக்காட்சியில் தோன்றுவேன்.. நாம் விரைவில் கண்டிப்பாக சந்திப்போம் ஐயா..🙏🙏
இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவிட்டது ஐயா.. மற்றொரு பதிவும் ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிட்டது ஐயா.. ஆகஸ்ட் 2023 கு பிறகு வரும் பதிவுகள் கவியரசர் கண்ணதாசன் என்று வரும்..