#திருப்புகழ் #அருணகிரிநாதர் #முருகன் #Thiruppugazh #Murugan
இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து பெரியோரைத் துதிக்காமல், வேறேதேதோ சிந்தனையில் திரியும் என்னைக் காப்பாயாக என வேண்டும் பாடல்.
பாடல்: அவனி தனிலே பிறந்து
பாடல் தொகுப்பு: திருப்புகழ்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: ப. சம்பந்தம் குருக்கள்
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளையோனாய் 1
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் 2
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் 3
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் 4
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் 5
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா 6
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா 7
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே. 8
பாடல் விளக்கம்: www.kaumaram.com/thiru/nnt0110...
நன்றி!!!
29 дек 2020