ஆலாலகண்டா பாடல் விமர்சனம் #alalakandan_song #sangaman_songs #vilari #alangudyvellaichamy சங்கமம் படத்தில் ஆலாலகண்டா பாடலைப் பாடத் தயங்கிய எம்எஸ் விஸ்வநாதன், படத்தில் பாடல் வரிகளில் உள்ள தகவல்கள்
Super. மாமனிதர் மாமன்னர் எம்ஸ்வி. அவரை நேசிக்காதாவர்கள் கிடையாது. ஏ ஆர் ரகுமான், இசைப்புயல், கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் எம்ஸ்வி கூட்டணியில் அமைந்த மிகச் சிறந்த பாடல். ஹரிஹரன் அவர்கள் குரலும் அவர் பாடிய இந்த பாடலும் மிகவும் சிறப்பு.
அய்யா தங்களின் விளக்கம் மிகவும் அருமை....பாடலை ரசிப்பது போல் தங்கள் விளக்கத்தையும் ரசித்தேன்....அதே போல் இந்த பாடலுக்காக.... ரஹ்மான் அவர்கள் MSVக்கு அவர் எதிர்பார்க்காத தொகையை தயாரிப்பாளரிடம் வாங்கி கொடுத்துள்ளார்....MSV... அவர்கள் இவ்வளவு எதற்கு என்று கேட்டிருக்கிறார்.... ரஹ்மான் அவர்கள் உங்கள் மதிப்பு உங்களுக்கு தெரியாது அய்யா... என்று கூறியதாக பத்திரிக்கையில் படித்த நினைவு...அந்த காலத்தில்.... உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து கவனித்து வரும் உங்கள் ரசிகன் நான்... வணக்கம் அய்யா.
எனக்கு தெரிந்து வேறு எந்த இசையமைப்பாளரும் செய்யாத ஒரு சிறந்த முயற்சி இது. இசைமாமேதை,மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஐயா அவர்களை யாரும் பாட வைக்க முயற்சி மட்டும் இல்லை, நினைத்து கூட பார்க்க வில்லை. இதை செய்து காட்டி மெல்லிசை மன்னருக்கு ஏற்கனவே, கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலையும், சங்கமம் படத்தில் ஆலாலகண்டா பாடலையும் தந்த ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.
கஷ்டத்தில் இருக்கும் ஒவ்வொரு மகளுக்கும் ஆறுதல் கூறும் MSV அவர்களின் இன்னும் ஒரு பாடல் தான் "உனக்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே....... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே " என்ற பாடல்.
மெல்லிசை மன்னர் இசையில் தான் ஆறு புஷ்பங்கள் என்ற படத்தில் திரு சந்திரபோஸ் அவர்களை பின்னணிப் பாடகராக அறிமுகம் செய்தார். அந்தப் பாடல் தான் ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை
MSV க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இவர் ஒருவர்தான் தமிழ் திரையிசை உலகில் மூன்று முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடிய ஒரே இசை அமைப்பாளர்.வி.குமார் இசையமைப்பில் வெள்ளிவிழா படத்திலும்,இளையராஜா இசையமைப்பில் தாய் மூகாம்பிகை படத்திலும் ரஹ்மான் இசையமைப்பில் சங்கமம் படத்திலும் பாடிய ஒரே இசை அமைப்பாளர்.
Waiting for Ilayaraja sir & Rahman sir combo... like a memorable song... Already Ilayaraja sir accepted Rahman sir request to compose tune for Firdous orchestra
EDHARKKUM ORU KAALAM UNDU PORUTTHIRU. MAGALEY.... INBATTHILUM THUNBATTHILUM SIRITHIRU. MAGALEY... ( SIVAGAMIYIN. SELVAN)..OLD AALAALA KANDAA AADALUKKU. THAGAPPAA.... MAGANEY....MAGANEY...... EVER. ECHO. SONGS.... MSV.....LIVES. WITH. MUSIC M. FOR. MUSIC S. FOR. SONG V. FOR. VISUAL
சங்கமம் படப் பாடல்கள் நன்றாக இருக்கும். நல்ல பாடல் தான். நன்றாக பாடி இருப்பார். ஆனாலும் இசை அமைப்பாளர் களிலேயே நல்ல குரல் உடையவர் இசை ஞாநி தான். அருமை யான குரல் உடைய ஏ எம் ராஜா அவர்களை இசை அமைப்பாளர் என்று சொல்வதை விட பாடகர் என்று தான் சொல்ல வேண்டும். ஆக கதாநாயகருக்கும் பாடக் கூடிய குரல் இசை ஞாநி க்கு தான் உண்டு. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
ஐயா வைரமுத்து “….ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா….” என்னும் வரிகள் தம்பி (பிரதீப்) கவிஞர் யுகபாரதியிடமிருந்து சுருட்டப்பட்ட வரிகள் என்று பல மேடைகளில் பட்ட வர்த்தனமாகவே பேசப்படுகிறதே …உங்களின் கருத்து …????