குணசீலன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இன்று மத்தி மீன் பிடிக்கும் காட்சி அருமையாக இருந்தது அதனை படம்பிடித்த செருதூர் நண்பர்களுக்கும் நன்றி செருதூர் காளியப்பன் அண்ணன் அவர்களுக்கும் நன்றி எனக்கு செருதூர் என்றதும் நினைவுக்கு வருவது அண்ணன் காளியப்பன் அவர்கள் மீனவநண்பன் அவரை நான் முதலாளி என்று தான் சொல்வேன் அவர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணன் பிறகு வேளாங்கண்ணியில் அண்ணன் கந்தையன் எனும் மீனவநண்பர் தான் அவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அதுபோல் வேளாங்கண்ணி யிலும் என் உடன்பிறவா அண்ணன் கந்தையனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது ஆகையால் அனைத்து மீனவர்கள் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
மிகவும் அரிமைய இ௫க்கு இந்த காச்சி கண்கலுக்கு குலிர்ச்சிய இ௫க்கு இதைபா்த்தல் மனஸ்சுக்கு மகிழ்ச்சியகிரது எனக்கு கேரியா் பன்னுகமீன்னை சென்னைக்கு அண்ணா வாழ்த்துகள் 🤗🤗🤗👏👏👏👏👏
மிகவும் அருமையாக உள்ளது.கண்களுக்கு குளிா்ச்சியாக உள்ளது.மனதிற்கு இனிமையாக உள்ளது. சென்னைக்கு courier service மூலம் அனுப்பி வையுங்கள் அண்ணா! அனைவருக்கும் வாழ்த்துகள்! மிகவும் சந்தோஷம்!
இப்போதுதான் தெரிகிறது மீனவர்கள் என்றாலே ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை அன்பு அன்புடனும் பாசத்துடனும் ஒருவருக்கொருவர் பழகும் தன்மை அவர்கள் ஆரவாரத்துடன் பாட்டு பிடிக்கும் இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இது போல் மற்ற ஜனங்களும் விவசாயம் பார்க்கும் தொழிலாளர்களும் விவசாயிகளும் சந்தோசமாக இருக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்
தம்பி, நான் உங்கள் ரசிகையாகவே மாறிவிட்டேன். உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை. மீன் பிடிப்பது, நடு கடலில் நீங்கள் பார்க்கும் இயற்கை அழகு, சரக்கு கப்பல்கள், ரோந்து கப்பல்கள்,நீங்கள் சமைத்து உண்ணும் காட்சி ஆகியவை மிக சுவாரசியமாக உள்ளது. உங்கள் தொழில் மேல் உள்ள காதல், பக்தி, ஈடுபாடு ஆகியவை சொல்லில் அடங்காது. நீங்கள் என்னை பொறுத்தவரை வீரர்களாக தேரிகிரீர்கள். உங்கள் வெகுளி பேச்சும் சிரிப்பும் உங்களுடைய சிறப்பு. அந்த இறை அருளும் கடல் அன்னையின் துணையும் உங்களுக்கு எப்பொழுதும் உடன் இருக்கும். நீங்களும் உங்கள் குழுவும் உங்களை போன்ற எல்லா மீனவர்களும் நலமுடன் இன்பமுற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! உங்கள் பதிவுகளுக்கு நன்றி!!!!
அருமையான பதிவு உங்களது தொழில் மிகவும் சிரமமாக த்தான். இருக்கிறது. உங்களுக்கு கடவுல் எப்பொழுதும் துனையிருப்பார். மீனவ நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நாகை மீனவ நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரொம்ப நாள் கழித்து இப்போது தான் கடலுக்கு சென்று இருக்கின்ற அதிகமாக சம்பாதித்து குடும்பங்களை பார்த்துக் கொள்ள வாழ்த்துக்கள்
நா திருச்சில இருக்கேன் விலை உயர்ந்த வேற எந்த மீனையும் விட மத்தி மீன் என்றால் எனக்கு உயிர் ஆனா திருச்சிக்கு வரும்போது மத்தி வயிறு வெடிச்சு கொழகொழன்னுதான் வருது மாசத்துல ஒருமுறை நல்ல மீன் கிடைக்குறதே அதிசயம் மீன் சுத்தம் செய்து உப்பு போட்டு ஐஸ் பேக் பண்ணினா ரொம்பநாள் கெடாம இருக்கும்னு சொல்றாங்க எனக்கு அது மாதிரி குட்டி குட்டி மத்தியா க்ளீன் செஞ்சு ஐஸ்பேக் பண்ணி அனுப்ப முடியுமா மாசத்துக்கு அஞ்சு கிலோ போதும் ரெகுலரா அனுப்ப முடியுமா உங்களால்
அப்படி போடு நானும் உங்களோடு சேர்ந்து கொண்டு ஐலேசா ஐலேசா பாடிக்கொண்டே வீடியோவை பார்த்தேன் ரசித்தேன் உங்களின் சந்தோசத்தை பார்த்து மனது மிகவும் குதூகலமாக இருந்தது