கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா ஒட்டகத்தெ கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ..! என்று பாடல் எழுதும் இக்காலத்து கவிஞர்கள் இம்மாதிரியான நல்ல பாடல்களைப் பார்த்து திருந்தினால் தமிழ் சினிமாவிற்கு நல்ல காலம் பிறக்கும்.
இதுபோல் இன்னொரு பாடலை இனிமேல் நாம் எதிர்பார்க்க முடியுமோ? இப்பாடலைக் கேட்கும் நாம் அனைவருமே கடவுளால் தனித்துவமாய் படைக்க பட்டவர்கள் என்பது என் எண்ணம். கண்ணதாசன் காலத்தில் வாழ்ந்த நாம் எல்லோரும் கொடுத்து வைத்த தலைமுறை!!!!!
என் வயது முதிர்ந்து கொண்டே செல்கிறதே. ஒரு குறிப்பிட்ட வயதினிலே இந்த இனிமையான பாடல்களை எல்லாம் விட்டு விட்டு மரித்து விடுவேனா? என்ற ஏக்கம் ஒரு பக்கம் என் மனதை வருத்த, இருக்கும் இந்த காலத்திலாவது இது போன்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கலாமே என்று என் மனதை தேற்றி, ஆறுதல் அடைகிறேன்.
இந்த ஒரு பாடல் போதும். உலகில் சிறந்தது எங்கள் தமிழ் மொழி என்பதற்கு. இரண்டு எழுத்து காய் என்ற சொல்லை வைத்து எங்கள் கவியரசு தமிழ் வானில் வர்ணஜாலம் வரைந்திருக்கிறார். வாழிய தமிழ்.
பாட்டின் அருமை பற்றி இவ்வளவு எழுதுனீங்க , ஆனால் கவிஞர் கண்ணதாசன் பெயரை சொல்லாமல் விட்டுடீங்களே . வாழ்க கண்ணதாசன் ! வாழ்க கண்ணதாசன் புகழ் ! வரும் தலைமுறைகள் கண்ணதாசன் என்று ஒரு தமிழ் தலைமகன் வாழ்ந்தான் என்று அறியட்டும் ,
காய் ஒரு சொல்லை வைத்து என்ன அருமையான கவியரசரின் பாடல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதப்பட்ட பாடல். இப்போது உள்ள கவிஞர்கள் எழுதுவார்களா இதுபோன்று. பட்டமும் பவிசும் தான் முக்கியம்
இன்னொரு யுகம் தோன்றினாலும் இப்பாடலுக்கு இணையான பாடலை எழுத இன்னொரு கவிஞன் பிறந்து வந்தாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன் நான் இவன் கோ ஆறுமுகம்
What a wonderful play of words!So imaginative....a whole array of the name of vegetables spun out into magical lyrics.With unforgettable music from another era.Good old days!
அவரே கூறியிருக்கிறார் அத்திக்காய்- அந்த திசையில். ஆலங்காய் - மிகவும் கடுமையாக (ஆலம் என்றால் விசம்) பாவைக்காய்- பாவை பெண்; கோவைக்காய்- கோ அரசன்,தலைவன், கொற்றவரங்காய்- கொற்றவன்,அரசன்; மாதுளம்காய்-மாது பெண்,உள்ளம், மனம். இப்படி அனைத்து வரிகளிலும் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் வகையில் எழுதப்பட்ட பாடல் இது.
சிகரெட்டுக்கும் நடிக்க ஆசை வந்து விடுகின்றது சிவாஜி அவர்கள் கையில் இருக்கையிலே , எப்படி தான் இந்த பாடல் கற்பனை செய்தாரோ பீம்சிங் , விஸ்வநாதன் ராமமூர்த்தி மெட்டமைத்தார்களோ , TMS சுசீலாம்மா இணையுடன் இருவர் , நடிக்க ஒரு கணேசன் , அற்புதமான பாடல் வரிகள் எழுதிய கவிஞர் வாழ்க இந்த உலகம் உள்ள வரை , வெறும் 15 நாட்களில் உருவான பந்துலு மாமா அவர்களின் சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த பொதுவாக எம் ஆர் ராதா-சிவாஜி காம்போ நல்ல வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படமும் சான்றாக அமைந்தது. வெறும் 15 நாட்களில் சிவாஜியின் படம் ஒன்று எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது என்பது மற்றுமோர் வெற்றி செய்தி
No one other than Kannadasan can create such lyrics using word kai in each sentence. Given life by Sivaji with Devika backed by wonderful music and playback
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் காயாக பூத்த என் முத்தமிழ்.என் தமிழ் மொழியின் வளத்தை சொல்ல கவிஞரின் இந்த பாடல் ஒன்றே போதும்.. கவிஞருக்கு தமிழ் மொழியில் தெரியாத சொற்களே இல்லை போலும்.."காதல் கொண்ட பாவ(வை)க்காய்".. .."மாதுளங்காய் ஆனாலும்.. மாதுஉளம் காய்யாகுமோ". கோதை எனை காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலா".. ஆனாலும்.. "இரவுக்காய் .. உறவுக்காய்.. ஏங்கும்".. "இந்த ஏழைக்காய்..நீயும் காய்..நேரில் நிற்கும் இவளை காய்".. என்று காதலில் எல்லாவற்றையும் காய வைத்த கவிஞன்... நிலவு தூது செல்ல அதை தூதுவிளங்காய் என்றாக்கிய என் கவியரசன் .. வாழ்வை வாழைக்காய் என்றும் .. அதை மனம் வீசும் ஏலக்காய் என்றவன் ஏன் கடைசியாக உள்ளத்தை மிளகாயுடன் ஒப்பிட்டான்?.. காதல் இனிப்பு.. வாழ்வு காரம் என்பதால் தானோ?.. காய்களுக்கு கனியின் இனிப்பை இசையாக தடவிய மெல்லிசை மன்னர்கள் ... நிலவையும் உறவையும் பருவத்தையும் உருவத்தையும் காய்ந்த .. சுசீலா.. சௌந்தரராஜன்.. சீனிவாஸ். ஜமுனா ராணி ...
@@kanagarajanthangarajan1373 நன்றி.. எவ்வளவு பொருள் கொண்ட பொருத்தமான அற்புதமான கவிஞரின் சொல்லாடல்.. மொழியைப்பற்றி பெருமை கொள்வதா ..?.. கவிஞரைப்பற்றி பெருமை கொள்வதா..?..
முதலில் எம்எஸ்வி ஐயா அவர்களும் இந்த பாடலுக்கு இசையமைக்க தயக்கம் காட்டினாராம் , காரணம் இதில் உள்ள வரிகள் காய் காய் என்று வருகிறது இதற்கு எப்படி இசையமைப்பது என்று கேட்டுள்ளார் பிறகு கண்ணதாசன் அவர்கள் நீ ஒரு இசையமைப்பாளர் தானே திறமை இருந்தால் இதற்கு இசை அமையும் என்று கூறியுள்ளார் பிறகு தான் இந்த ஒப்பற்ற பாடல் நமக்கு கிடைத்துள்ளது.
காய் என்பதை வைத்து எவ்வளவு அழகாக பாடல் எழுதி இருக்கிறார் கண்ணதாசன் அவர்கள்❤❤❤அந்தக் காலத்தில் நிறைய புத்தகம் படித்தார்கள்.. இப்போது உள்ளவர்களை சொல்லவே வேண்டாம்😂😂😂ஆனால் டைட்டில் மட்டும் மறக்காமல் போட்டுக் கொள்வார்கள்... நல்ல கவிஞர் நா. முத்துக்குமார் போன்றோர் சீக்கிரம் நம்மை விட்டு போய் விடுகிறார்கள்
"வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத்தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். -நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
உள்ளம் எல்லாம் இழகாயோ உள்ளம் எல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ என்ன கவி கண்ணதாசன் தமிழ் விளையாட்டு பாடல் வரிகள்.. அத்தி க்காய் காய் அத் திக்காய்.. இத்தி க்காய் காயாதே இத் திக்காய்..
My TAMIL TEACHER Any Time Singing this SONG in our CLASS ROOM A TAMIL GRAMMER in this SONG He Told his NAME Mr. BALAGURU 🙏💐🌹👍I Never furget in my life The SCHOOLDAYS MEMORIES 🙏 Thank you this Delighted SONG I ❤️ IT 😀
Excuse me, dont mean to be disrespectful... but Im from Argentina, and Ive felt in love with tamil music, and Ive looking for an specific lyric for years now. Do you think you could help me? :)