nan kadhal ennum kavidhai sonnen kattil mele antha karunaikku nan parisau thanthen thottile mele what a great word by engal Kaviarasar no virasam and abasam
கவிஞரைப் பற்றி பேச வேண்டும் என்றால் எவ்வளவோ பேசலாம். ஒருவரை பாராட்டும்போது அவரோடு நட்பாக இருந்த இன்னொருவரை குறைத்துப் பேசுவது அநாகரீகமானது எனபது கூட தெரியாமல் பேசுகிறார். இசையை இழிவாகப்பேசும் இவர் பாடலைப் பற்றி பேசுவது சரியாக இருக்குமா?. கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அவரை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். ஆனால் இசையமைப்பாளர்கள் ஜங்,ஜங் என்று இசைக்கிரார்கள் என்று மிகவும் மலிவான முறையில் பேசுகிறார். காகிதத்தில் இருக்கும் வரை அது வெறும் கவிதைதான். இசையமைப்பாளர் கைக்கு வந்தபிறகே பாடலாகிறது.. அன்பு மலர், ஆசை மலர் பாடல் கவிஞரின் அற்புதமான வரிகள். இல்லை என்று யாரும் சொல்லவில்லை. இந்த பாடலின் துவக்கம் எம்.எஸ்.வி யின் குரலில் ஒ....ஓ....ஓ.....ஓ....ஓ என்ற சோகம் இழையோடும் ராகத்தில் பிரம்மாண்டமாக ஒலிக்கும். மூன்று மணிநேரம் பின்னர் வரவிருக்கின்ற படத்தை மூன்று நிமிடங்களில் கண்ணதாசன் பாடலாலும், விஸ்வநாதன் இசையாலும் சொல்லியிருப்பார்கள் . யாரையும் அவசரப்பட்டு குறைத்து மதிப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் பேசாமல் இருப்பது ரொம்பவும் நல்லது.
📌📌📌இவர் பேசித்தான் கண்ணதாசன் புகழ் எங்களுக்கு தெரியுமா என்ன ? இவர் செய்த "தன்ன நன்னா" MSV ஐயாவின் இசை. இவர் பெரிய எடிட்டராக இருக்கலாம் ஆனால் மேடையில் பேச தெரியவில்லை. கண்ணதாசன் சினிமா பாடல்கள் எழுதவில்லையென்றால் மக்கள் அவரை என்றோ மறந்திருப்பார்கள் அவரின் புகழுக்கு இசையமைப்பாளர்களின் பங்கு மிக அதிகம் இதை எவராலும் மறுக்க முடியாது.