#idlimavupreparation #idlibatter
மிக்ஸியில் இட்லி மாவு எப்படி அரைப்பது?
மூன்று பங்கு இட்லி அரிசியும் ஒரு பங்கு உளுத்தம் பருப்பையும் 5 மணி நேரம் தனித்தனியே ஊற வைக்கவும். 5 மணி நேரத்துக்கு அதிகமாக கூட ஊறலாம்.
பின்பு நன்கு களைந்து அரிசியையும் உளுந்தையும் மிக்ஸியில் தனித்தனியே அரைத்து எடுக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.இட்லி மாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் நன்கு கரைத்து பாத்திரத்தில் வைக்கவும். பின்னர் இந்த மாவை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் புளிக்க விட்டு இட்லி தோசை ஊற்றினால் அருமையாக வருகிறது. இந்த அளவை கடைபிடித்து இட்லி தோசைக்கு அரைக்கவும். உளுந்தம் பருப்பு ஊற வைக்கும்போது ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். வெந்தயம் சேர்த்தால் தான் தோசை முறுகலாக இருக்கும். நன்கு சிவந்து வரும்.மிக்ஸியில் அரைத்து ஊற்றிய இட்லி என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு சாஃப்டாக இருக்கும்.
16 май 2020